ஈரானுக்கு கண்டனம்.. ஜோர்டான் மன்னர், பஹ்ரைன் அரசர், சவுதி இளவரசருடன் மோடி பேச்சு

Published On:

| By Mathi

Modi Saudi

ஜோர்ட் மன்னர், பஹ்ரைன் அரசர் மற்றும் சவுதி அரேபியாவின் இளவரசருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது, ஈரானின் தாக்குதல்களுக்கு மோடி கண்டனம் தெரிவித்தார்.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

ADVERTISEMENT

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். சவுதி அரேபியா மீதான சமீபத்திய தாக்குதல்களை பிரதமர் வன்மையாகக் கண்டித்ததுடன், இத்தகைய நிகழ்வுகள் அந்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாகக் குறிப்பிட்டார்.

பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதன் அவசியத்தை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

ADVERTISEMENT

இந்த சவாலான காலங்களில் சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக, பிரதமர், பட்டத்து இளவரசருக்கு நன்றி தெரிவித்தார்.

இது தொடர்பாக மோடி கூறுகையில், மேற்கு ஆசியாவில் நிலவி வரும் சூழல் குறித்து சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மானுடன் விவாதித்தேன். சவுதி அரேபியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் சமீபத்திய தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பது மிகவும் அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம். இந்தத் கடினமான நேரத்தில் இந்திய சமூகத்தினரின் நலனைப் பாதுகாப்பதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன் என்றார்.

ADVERTISEMENT

ஜோர்டான் மன்னர்

ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

அந்த பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து பிரதமர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். ஜோர்டான் மக்களின் அமைதி, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான ஆதரவை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்தத் துயரமான நேரத்தில் ஜோர்டானில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு ஆதரவளிப்பதற்காக மன்னருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

பஹ்ரைன் அரசர்

பிரதமர் நரேந்திர மோடி பஹ்ரைன் அரசர் ஹமத் பின் இசா அல் கலீஃபாவுடன் தொலைபேசியில் உரையாடினார்.

அப்போது, பஹ்ரைன் மீதான சமீபத்திய தாக்குதல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தார். இந்தக் கடினமான நேரத்தில் பஹ்ரைன் மக்களுக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவை அவர் வெளிப்படுத்தினார்.

பஹ்ரைனில் வசிக்கும் இந்திய மக்களுக்கு அளித்த ஆதரவு மற்றும் உதவிக்காக அந்நாட்டு அரசருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இந்த உரையாடல் தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி, பஹ்ரைன் அரசர் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபாவுடன் ஒரு ஆக்கப்பூர்வமான தொலைபேசி உரையாடலை மேற்கொண்டேன். பஹ்ரைன் மீதான தாக்குதல்களை இந்தியா கண்டிப்பதுடன், இந்தத் துயரமான தருணத்தில் அந்நாட்டு மக்களுக்கு இந்தியா முழு ஆதரவையும் வழங்குகிறது. பஹ்ரைனில் உள்ள இந்திய மக்களுக்கு அளித்த உறுதியான ஆதரவிற்காக நான் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share