விருதுநகரில் இன்று (ஜூன் 26) காலை விளையாட்டுத்துறை சார்பில் சிலம்ப வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குப் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஆட்சியர் சுகபுத்திரா செய்து வந்தார்.
இந்த விழா பேனரில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் முதலாவதாகவும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயர் இரண்டாவதாகவும் போடப்பட்டிருந்தது.
விழாவில் பங்கேற்க மேடைக்கு வந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, பேனரில் தன் பெயர் இரண்டாவதாக இருப்பதைப் பார்த்து அதிருப்தி அடைந்தார். விழா ஏற்பாடுகளைச் செய்திருந்த மாவட்ட கலெக்டர் சுகபுத்ராவிடம் இதுகுறித்து மேடையிலேயே அவர் கேள்வி எழுப்பினார்.
“பொதுவாக ஒரு மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் யாரோ, அவர் பெயரைத்தான் முதலில் போட வேண்டும். இந்த மாவட்டத்திற்கு நான் தான் பொறுப்பு அமைச்சர். அப்படி இருக்கும்போது என்னுடைய பெயர் தானே பேனரில் முதலில் இருக்க வேண்டும்? ஏன் அமைச்சர் கீர்த்தனா பெயரை முதலில் வைத்தீர்கள்?” என்று கலெக்டரிடம் நேரடியாகக் கேட்டார்.
மேலும், “மாவட்டப் பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் எனக்குத்தான் முதலில் மரியாதை கொடுக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார். அமைச்சரின் இந்த அதிரடி கேள்வியால் விழா அரங்கில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
