தமிழ்நாட்டின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை (White Paper) நிதி அமைச்சர் மரியவில்சன் இன்று (ஜூன் 16) வெளியிட்டார்.
நிதிநிலை வெள்ளை அறிக்கையின் (WHITE PAPER) முக்கிய அம்சங்கள்:
- மாநிலத்தின் மொத்த நிலுவைக் கடன் ₹10 இலட்சம் கோடி ரூபாய்
- இந்த கடன், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 28.3% ஆகும்
- வருவாய்ப் பற்றாக்குறை ₹78,324 கோடி ரூபாய். இது வரலாற்றிலேயே இதுவரை இல்லாத உச்சமாகும்
- மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR/GSDP) வெறும் 5.45% மட்டுமே.
இது மிகக் குறைந்த அளவாகும். - மொத்த வருவாய் வரவுகளில் வட்டிச் செலவினத்தின் சதவீதம் 22.8% ஆகும்.
- தவிர்க்க இயலாத செலவினங்களின் சதவீதம் 64.4% ஆகும்.
- உண்மையான மொத்த கடனளவு ₹13.18 இலட்சம் கோடி ரூபாய். இந்த உண்மையான கடனளவில் அரசு பொதுத் துறை நிறுவனங்களின் கடன் பொறுப்புகளும் அடங்கும்.
- கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் ₹4.87 லட்சம் கோடி புதிய கடன் சேர்க்கப்பட்டுள்ளது.
- சுதந்திரத்திற்குப் பின் முதல் 60 ஆண்டுகளில் சேர்த்த கடனை விட இந்த 5 ஆண்டுகளில் சேர்ந்த கடன் அதிகம்.
- கடன் ஆண்டுக்குச் சராசரியாக 14.3% வளர்ந்து வருகிறது.
- ஆனால் மூலதன முதலீடு வெறும் 8.3% மட்டுமே வளர்ந்துள்ளது.
- ஒருவருக்கான கடன் பொறுப்பு ₹1,28,934 ஆக உயர்ந்துள்ளது.
- மின்வாரியக் குழுமத்தின் குவிந்த இழப்பு ₹1,82,361 கோடி ரூபாய்.
- மின்வாரியத்தின் கடன் ₹2,47,130 கோடி ரூபாய்.
- மின்வாரியத்திற்கு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய நிதி உதவி ₹16,000 கோடி ரூபாய். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி செலுத்த வேண்டிய கட்டாயத் தொகை ₹11,800 கோடி ரூபாய்.
- போக்குவரத்து கழகங்களின் மொத்த இழப்பு ₹72,607 கோடி ரூபாய்.
- பேருந்து இயக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ₹78.81 செலவாகிறது.
- ஆனால் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் கிடைக்கும் வருவாய் வெறும் ₹25 மட்டுமே.
- நுகர்பொருள் வணிகக் கழகத்தின் மூலதனக் கடன் ₹27,181 கோடி ரூபாய்.
- அரசு உத்தரவாதப் பொறுப்புகள் (Guarantees) ₹1,79,782 கோடியாக உயர்ந்துள்ளது.
- வருவாய்ப் பற்றாக்குறை உண்மையான நிலையை விட சுமார் 79% குறைவாகவே பட்ஜெட்டில் கணிக்கப்பட்டிருந்தது.
- 2026-27 நிதி ஆண்டிற்கான உண்மையான நிதி பற்றாக்குறை சுமார் ₹1,52,144 கோடியாக இருக்கும்.
- வருவாய் வரவில் 64% க்கும் மேல் சம்பளம், பென்ஷன் மற்றும் வட்டிக்கே செலவாகிறது.
- 2031-ஆம் ஆண்டில் முதியோர் மக்கள் தொகை பங்கு 18.2% ஆக உயரும்.
- வருமானம் ஈட்டுபவர்களை விட சார்ந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- வட்டி செலவு மட்டும் ஆண்டுக்கு ₹67,050 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
- புதிய நலத்திட்டங்களுக்கான நிதி ஆதாரம் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மூலமே உருவாக்கப்படும்.
- வணிக வரி, முத்திரைத்தாள், சுரங்கத் துறைகளில் வருவாய் கசிவு உள்ளது.
- 2017-ஆம் ஆண்டு முதல் ஜி.எஸ்.டி. (GST) இழப்பீடு திட்டம் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது.
- இருந்தபோதிலும், அதற்கான மாற்றங்களைச் செய்ய அரசு தவறிவிட்டது.
- அரசு உத்தரவாதக் கடன்களுக்கான வட்டி செலவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
- மின்வாரியத்தின் கடன் நிர்வாகம் ஒரு பெரிய நிதி சுமையாக உள்ளது.
- பொதுத்துறை நிறுவனங்களின் இழப்புகள் இறுதியாக அரசின் நிதிச் சுமையாக மாறுகிறது.
- பொருளாதாரச் சிக்கலை ஒப்புக்கொள்வது அதைச் சரிசெய்வதற்கான முதல் படியாகும்.
- வருவாய் உயர்வை விட கடனின் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.
- உள் கட்டமைப்பு முதலீடுகளை விட நுகர்வுக்கே அரசு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது.
- முந்தைய காலக்கட்டத்தில் வழங்கப்பட்ட இலவசங்கள் மற்றும் மானியங்கள் நிதி நிலையை பாதித்துள்ளது.
- அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் தொகை ஆண்டுக்கு ₹5,000 கோடி வீதம் உயர்கிறது.
- போக்குவரத்து கழகங்களில் மட்டுமே பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
- நிதி சிக்கல்களைச் சமாளிக்க நிர்வாகத் திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை அவசியமாகும்.
- கூடுதல் வரிச் சுமை இன்றி வருவாயை அதிகரிக்க முடியும் என அரசு நம்புகிறது.
- ஒவ்வொரு 100 ரூபாய் வருவாயிலும், சுமார் 64 ரூபாய் நிர்வாக செலவுகளுக்கு மட்டுமே செல்கிறது.
- அரசு கடன் சுமை குறையாத நிலையில், வட்டி விகிதங்கள் தொடர்ந்து அழுத்தத்தை தருகின்றன.
- மூலதன முதலீடுகள் மந்தமானதால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
- மின்வாரியம் மற்றும் போக்குவரத்து கழகங்கள் நீண்டகால சீர்திருத்தங்களை எதிர்பார்க்கின்றன.
- இந்த நிதி நிலையை மீட்டெடுக்க உடனடி நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.மொத்த நிலுவைக் கடன் ₹10 இலட்சம் கோடி ரூபாயாக உள்ளது, இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 28.3% ஆகும்.
- வரலாற்றிலேயே இல்லாத உச்சமாக, வருவாய்ப் பற்றாக்குறை ₹78,324 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
- மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR/GSDP) மிகக் குறைந்த அளவாக 5.45% எனப் பதிவாகியுள்ளது.
- மொத்த வருவாய் வரவுகளில் 22.8% வட்டிச் செலவினங்களுக்கே செலவிடப்படுகிறது.
- பொறுப்பேற்ற அல்லது தவிர்க்க இயலாத செலவினங்கள் 64.4% ஆக அதிகரித்துள்ளன.
- அரசு பொதுத் துறை நிறுவனங்களின் கடன் பொறுப்புகளை உள்ளடக்கிய உண்மையான கடனளவு ₹13.18 இலட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
- புதிய வரிகளை விதிக்காமல், நிர்வாகத்தைச் சீரமைப்பதன் மூலம் வருவாயை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
- வணிக வரி, முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் சுரங்கத் துறையில் உள்ள வருவாய் கசிவுகளைத் தடுத்தல்
- பொதுத்துறை நிறுவனங்களைச் சீரமைத்தல் மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்தல்
- செலவினங்களை நுகர்வு நோக்கிலிருந்து மூலதன முதலீடு நோக்கிற்கு மாற்றுதல்.மின்வாரியத்துக்கான கடன் ரூ2.47 லட்சம் கோடி
- சொந்த வரி வசூல் திறன் கடுமையாக சரிந்துள்ளது
- நலத்திட்டங்கள் தொடரவே செய்யும்; அதற்கு தேவையான வருவாய் ஆதாரங்கள் உருவாக்கப்படும்.
- ரூ25,000 கோடி செலவாகும் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன
- நிர்வாக சீர்திருத்தங்கள் ஒத்திவைக்கப்பட்டன
- ஜிஎஸ்டிக்குப் பின் மூலதன செலவு குறைந்துவிட்டது
- சொத்துப் பதிவில் வருவாய் குறைவு; முத்திரைத்தாள் கட்டணம் குறைவு
- மத்திய அரசின் நிதிப் பகிர்வு 4.09%ஆக குறைந்துவிட்டது
- 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் ரூ.5 லட்சத்தில் கோடியில் ரூ.10 லட்சம் கோடியாக அதிகரித்தது
- தமிழகத்தின் உண்மையான கடன் அளவு ரூ13.18 லட்சம் கோடி
- தமிழகத்தின் நிலுவைக் கடன் சதவீதம் குறைந்துள்ளது; மாநில ஜிடிபியில் 28.7%-ல் இருந்து 28.3% ஆக குறைந்துள்ளது.
- வருவாய் பற்றாக்குறை 2.25 சதவீதத்தில் இருந்து 2.22 சதவீதமாக குறைந்துள்ளது.
- வட்டி, சம்பளம், ஓய்வூதியத்துக்கு 64% நிதி செலவிடப்படுகிறது.
- தமிழ்நாட்டின் தனிநபர் மீதான கடன் ரூ1.28 லட்சம்
- வட்டி செலவினத்தால் மூலதன செலவு குறைகிறது
நிதி நிலை வெள்ளை அறிக்கை முழுமையாக (WHITE PAPER)





















