கரூர் மாவட்ட ஆட்சியராக முத்துக்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி தலைமை செயலாளர் சாய் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில்,
வேளாண்மை துறை இயக்குனராக இருந்த முருகேஷ் மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராகவும்,
மீன்வளத்துறை இயக்குனர் முரளிதரன் வேளாண்மை துறை இயக்குனராகவும்
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனர் முத்துக்குமரன் கரூர் மாவட்ட ஆட்சியராகவும்,
திருவள்ளூர் பயிற்சி துணை ஆட்சியர், பொன்னேரி சார் ஆட்சியராகவும்
செங்கல்பட்டு பயிற்சி துணை ஆட்சியர், ஸ்ரீபெரும்புதூர் சார் ஆட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
