சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் தமிழ் மொழியில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருந்ததை இந்தி மொழி பெயர் பலகைகளாக மாற்றப்பட்டுள்ளதற்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி எம்.பி, ”கல்லக்குடியில் தொடங்கியது, சென்னை பூங்கா வரை தொடர்கிறது. அவர்கள் திணிப்பதை நிறுத்தப் போவதுமில்லை. நாம் அதை எதிர்ப்பதில் ஓயப்போவதுமில்லை” என தெரிவித்துள்ளார்
