திடீரென்று பதவி விலகிய IRCTC சேர்மன் சஞ்சய் குமார் ஜெயின்: என்ன காரணம்?

Published On:

| By Santhosh Raj Saravanan

IRCTC Chairman and Managing Director Sanjay Kumar Jain resigns

IRCTC-யின் தலைவரும் நிர்வாக இயக்குநரான (CMD) சஞ்சய் குமார் ஜெயின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவர் ஜூலை 20 வரை தனது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவரது இந்த முடிவு ரயில்வே மற்றும் சுற்றுலாத் துறையைச் சார்ந்தவர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்ன காரணம்?

சஞ்சய் குமார் ஜெயின் தனது ராஜினாமாவுக்கு முற்றிலும் தனிப்பட்ட காரணங்களே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். ரயில்வே வாரியத்திற்குள் பல்வேறு யூகங்கள் நிலவிய நிலையில், எந்தவிதமான அழுத்தமோ அல்லது சர்ச்சையோ அவரது ராஜினாமாவுக்குக் காரணம் அல்ல என்று அவர் தெளிவுபடுத்தினார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுத்ததாகவும், அதை அரசு ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT
பதவிக்காலம் முடிவதற்கு முன்பே விலகல்:

சஞ்சய் ஜெயினின் பதவிக்காலம் 2026 டிசம்பர் 31 வரை நீடிக்கவிருந்தது. அதாவது, அவர் தனது பதவியில் இன்னும் சுமார் ஆறு மாதங்கள் பணியாற்ற வேண்டியிருந்தது. இருப்பினும், அவர் முன்கூட்டியே விலக முடிவு செய்துள்ளார். அரசின் ஒப்புதலுடன் அவர் இப்போது ஜூலை 20 வரை CMD-யாகத் தொடர்வார்.

2024-ல் கிடைத்த முக்கியப் பொறுப்பு:

சஞ்சய் குமார் ஜெயின் 2024ஆம் ஆண்டில் IRCTC-யின் CMD-யாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ், இந்நிறுவனம் டிக்கெட் முன்பதிவு, சுற்றுலா சேவைகள் மற்றும் உணவு வழங்கல் (கேட்டரிங்) தொடர்பான பல்வேறு துறைகளில் தனது சேவைகளை விரிவுபடுத்தியது. இவர் 1990ஆம் ஆண்டு பிரிவு இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை (IRTS) அதிகாரியாவார். ரயில்வே நிர்வாகத்தில் இவருக்குப் பரந்த அனுபவம் உள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share