தலைமுடி கொட்டுற பயமா? ‘உடனே’ நிறுத்த முடியுமா? இதோ சில நடைமுறைத் தீர்வுகள்!

Published On:

| By Santhosh Raj Saravanan

how to stop hair fall immediately natural remedies

சீப்பை எடுக்கும்போதெல்லாம் கையில் கொத்துக் கொத்தாக முடி வரும்போது நமக்கு வரும் பதற்றமும் பயமும் சொல்லி மாளாது. “முடி கொட்டுறதை (Hair Fall )உடனே நிறுத்த ஏதாச்சும் வழி சொல்லுங்களேன்…” என்று கூகுளில் தேடாதவர்களே இருக்க முடியாது.

முதலில் ஒரு உண்மையை ஓப்பனாகப் பேசிவிடுவோம். “ஒரே நாளில்” அல்லது “அடுத்த நொடியே” முடி கொட்டுவதை முற்றிலும் நிறுத்த எந்தவொரு மேஜிக் ஷாம்புவோ அல்லது எண்ணெயோ உலகத்தில் இல்லை. இயற்கையான உடல் சுழற்சி முறைப்படி, இன்று உங்கள் தலையிலிருந்து விழும் ஒரு முடி, ஏற்கனவே 2 முதல் 3 மாதங்களுக்கு முன்பே அதன் ஆயுளை முடித்துக்கொண்டு விழக் காத்திருந்த ஒன்றுதான்.

ADVERTISEMENT

ஆனால், நாம் இன்று செய்யும் சில தவறுகளை உடனடியாக மாற்றுவதன் மூலமும், சரியான ஊட்டச்சத்துக்களைக் கொடுப்பதன் மூலமும் மேற்கொண்டு முடி கொட்டுவதையும், வேர்கள் பலவீனமாவதையும் இன்றிலிருந்தே தடுத்து நிறுத்த முடியும்! அதற்கான சூப்பர் கையேடு இதோ!

இன்றே, இப்போதே நிறுத்த வேண்டிய தவறுகள்

முடி கொட்டுவதை நிறுத்த நாம் புதுசாக எதையும் செய்வதற்கு முன்னால், முடியைக் கெடுக்கும் இந்த விஷயங்களை உடனே நிறுத்த வேண்டும்:

ADVERTISEMENT
  • ஈர முடியோடு சண்டை போடாதீர்கள்: குளித்து முடித்த உடனே முடி மிகவும் மென்மையாக, பலவீனமாக இருக்கும். அந்த நேரத்தில் சீப்பை வைத்து அழுத்தமாக வாரினாலோ அல்லது துண்டை வைத்து வேகமாகத் துடைத்தாலோ வேர்கள் அப்படியே கழன்று கொண்டு வந்துவிடும். முடி நன்றாகக் காய்ந்த பின் அகலமான பற்கள் கொண்ட சீப்பைப் பயன்படுத்துங்கள்.
  • இறுக்கமான ஹேர்-ஸ்டைல்களுக்கு ‘நோ’: முடியைப் பின்னோக்கி இழுத்து மிக இறுக்கமாகப் போனிடெயில் அல்லது கொண்டை போடுவதை உடனே தவிருங்கள். இது வேர்களை இழுத்து பலவீனப்படுத்தி, முன்நெற்றி முடியை அடியோடு காலி செய்துவிடும்.
  • கெமிக்கல் மற்றும் ஹீட் கருவிகள்: ஹேர் டிரையர், ஸ்ட்ரெய்ட்னிங் கருவிகளைப் பயன்படுத்துவதை சில வாரங்களுக்கு மூட்டை கட்டி வையுங்கள். அதிகப்படியான சூடு முடியின் ஈரப்பதத்தை உறிஞ்சி, முடியை நடுவிலேயே உடையச் செய்துவிடும்.

கூந்தல் வேர்களை எழுப்பி உட்கார வைக்கும் இயற்கை வித்தைகள்

வெங்காயச் சாற்றின் மேஜிக் முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவதில் வெங்காயச் சாற்றிற்கு நிகர் வேறில்லை. இதில் இருக்கும் அதிகப்படியான சல்பர் சத்து, கூந்தல் வேர்களுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரித்து, கொட்டும் முடியை உடனடியாகக் கட்டுப்படுத்த உதவும். வெங்காயத்தைச் சாறு எடுத்து, பஞ்சைப் பயன்படுத்தி உச்சந்தலையில் தடவி, 20 நிமிடம் கழித்து வீரியம் குறைந்த ஷாம்பு கொண்டு அலசுங்கள்.

கருவேப்பிலை – தேங்காய் எண்ணெய் மசாஜ் தேங்காய் எண்ணெயுடன் ஒரு கைப்பிடி கருவேப்பிலை மற்றும் நெல்லிக்காய் சேர்த்து நன்கு காய்ச்சி வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு மசாஜ் செய்து வாருங்கள். இதில் இருக்கும் பீட்டா-கரோட்டின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வேர்களுக்கு நல்ல ஊட்டம் தரும்.

ADVERTISEMENT

தட்டில் இருக்க வேண்டிய தலைமுடிக்கான பவர் உணவுகள்

ஷாம்பு மற்றும் எண்ணெய்களை விட நீங்கள் வாய்க்குள் அனுப்பும் உணவுகள்தான் 80% உங்களது முடியின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கின்றன.

  • புரதச்சத்து: நமது தலைமுடி ‘கெரடின்’ என்ற புரதத்தால் நப்பியது. எனவே முட்டை, பன்னீர், சுண்டல், முளைக்கட்டிய பயிர்கள் மற்றும் சிக்கன் போன்ற புரோட்டீன் நிறைந்த உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • இரும்புச்சத்து: உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் கூந்தல் வேர்களுக்கு ஆக்சிஜன் செல்லாது. இதனால் முடி அதிகமாகக் கொட்டும். இதற்குப் பேரீச்சம்பழம், கீரைகள் மற்றும் மாதுளம்பழம் சிறந்த தீர்வு.

மனதிற்கான ஒரு குட்டி அலர்ட்: “முடி கொட்டுகிறதே…” என்று நீங்கள் அதிகமாகக் கவலைப்பட்டு மன அழுத்தம் அடைந்தால், உடலில் சில ஹார்மோன்கள் சுரந்து முடியை இன்னும் அதிகமாகக் கொட்டச் செய்யும். எனவே, நிம்மதியான 7 மணி நேரத் தூக்கமும், அமைதியான மனநிலையும் உங்களது தலைமுடியைக் காப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share