நிராகரிப்பா? நீங்க தோற்கல! நிராகரிப்பை நாகரிகமாக எதிர்கொள்ளும் ராஜதந்திரங்கள்!

Published On:

| By Santhosh Raj Saravanan

how to handle rejection gracefully psychology

வாழ்க்கையில காதல், வேலை, அல்லது ஒரு புதிய முயற்சி என எதிலாவது ஒருமுறை கூட ‘நோ’ (No) என்ற வார்த்தையைக் கேட்காத மனிதர்களே இருக்க முடியாது. நிராகரிப்பு (Rejection) என்பது நம் இதயத்தை உலுக்கும் ஒரு கசப்பான அனுபவம்தான்.

நிராகரிக்கப்படும் போது நம்மீதே நமக்கு ஒரு விவரிக்க முடியாத கோபமும், தாழ்வு மனப்பான்மையும் வரும். ஆனால், அந்த நிராகரிப்பை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் (How to Handle Rejection) என்பதில்தான் நமது மனமுதிர்ச்சியும், கம்பீரமும் ஒளிந்திருக்கிறது. அதைத் தலைகுனியாமல் நாகரிகமாகவும், புன்னகையோடும் கடந்து செல்வது எப்படி என்று பார்ப்போம்.

ADVERTISEMENT
உணர்வுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்

நிராகரிப்பு ஏற்படும் போது ஏமாற்றம், வருத்தம் அல்லது கோபம் வருவது முற்றிலும் இயற்கை. “எனக்கு எதுவுமே ஆகவில்லை, நான் மிகவும் ஸ்ட்ராங்” என்று போலி முகமூடி அணிந்து உங்களது உணர்வுகளை ஒடுக்காதீர்கள்.

அழுகை வந்தால் அழுங்கள், காயம்பட்ட மனதிற்குச் சற்றே ஓய்வு கொடுங்கள். உங்களது உணர்வுகளை நீங்கள் அப்படியே அங்கீகரிக்கும் போதுதான், உங்களால் அதிலிருந்து மிக விரைவாகவும் முழுமையாகவும் மீள முடியும்.

ADVERTISEMENT
அதை உங்களது சுயமதிப்போடு ஒப்பிடாதீர்கள்

ஒரு நிறுவனத்தில் உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றாலோ, அல்லது ஒருவருக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றாலோ, “நான் தகுதியற்றவன், என் முகம் அழகில்லை” என்று உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

நிராகரிப்பு என்பது அந்த குறிப்பிட்ட இடத்திற்கு அல்லது அந்த மனிதரின் தற்போதைய தேவைக்கு நீங்கள் ‘பொருந்தவில்லை’ (Not a right fit) என்று அர்த்தமே தவிர, நீங்கள் எதற்கும் லாயக்கற்றவர் என்று அர்த்தமல்ல. உங்களது ஒட்டுமொத்த மதிப்பைத் தீர்மானிக்கும் உரிமையை மற்றொரு மனிதரின் கையில் கொடுக்காதீர்கள்.

ADVERTISEMENT
கண்ணியத்தையும் கம்பீரத்தையும் காத்திடுங்கள்

உங்களை நிராகரித்த நபரிடம் கோபமாக மெசேஜ் செய்வதோ, சமூக ஊடகங்களில் அவர்களைப் பற்றித் தவறாகப் பேசுவதோ உங்களது சுயமரியாதையை அடியோடு குறைத்துவிடும்.

உங்களை நிராகரித்தவரிடம், “உங்களது முடிவை நான் மதிக்கிறேன், எனக்கு இந்த வாய்ப்பை / நேரத்தைத் தந்ததற்கு நன்றி” என்று கனிவாகக் கூறி கம்பீரமாக விலகிவிடுங்கள். உங்களது இந்த நாகரிகமான அணுகுமுறையும் முதிர்ச்சியும் அவர்களை நிச்சயம் வியக்க வைக்கும்.

புதிய பாதையாக மாற்றுங்கள்

உளவியல் பார்வை: ஒரு கதவு அடைக்கப்பட்டால், அங்கே உங்களது பயணம் முடிந்துவிடவில்லை. பிரபஞ்சம் உங்களுக்காக இன்னும் ஒரு ஆகச்சிறந்த பாதையைத் (Redirection) தயார் செய்கிறது என்று அர்த்தம். எடிசன் முதல் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வரை உலகளவில் சாதித்த பலரும் பலமுறை மிகக் கொடூரமாக நிராகரிக்கப்பட்டவர்கள்தான். அவர்கள் அந்த ‘நோ’ (No) என்ற வார்த்தையை அடுத்த கட்டத்திற்கான படிக்கட்டாக மாற்றிக் கொண்டார்கள்.

அடுத்த கட்டத்தை நோக்கி நகருங்கள்

நிராகரித்த இடத்திலேயே நின்று கொண்டு, “அவர்கள் ஏன் என்னை வேண்டாம் என்று சொன்னார்கள்?” என ஓவர் திங்கிங் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. ஒருமுறை உங்களது தவறுகளைச் சுயபரிசோதனை செய்துவிட்டு, அடுத்த வாய்ப்புகளை நோக்கி உங்களது கவனத்தைத் திருப்புங்கள்.

உலகம் மிகப்பெரியது, உங்களுடைய திறமைக்கும் அன்பிற்கும் தகுதியான இடங்களும் மனிதர்களும் இங்கே கோடிக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்!

நன்றி: ஸ்ரீவித்யா மாரியப்பன், எழுத்தாளர் மற்றும் தொடர்பாடல் நிபுணர்

Photo of author
Santhosh Raj Saravanan

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share