கல்வித் துறையில் ‘ஏஐ’ புரட்சி! இந்தியாவில் டீச்சர்கள் மற்றும் மாணவர்களுக்காக கூகுள் அதிரடி திட்டம்

Published On:

| By Santhosh Raj Saravanan

google ai launches education initiatives teachers students india 2026 details

உலகத் தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுள் (Google AI) இந்தியக் கல்வித் துறையை அடுத்த லெவலுக்குக் கொண்டு போக ஒரு பிரம்மாண்ட ‘ஏஐ கல்விப் புரட்சி’ திட்டத்தை லண்டனில் நடந்த உலகக் கல்வி மன்ற மாநாட்டில் (Education World Forum 2026) அதிரடியா தட்டி விட்டுருக்கு! இந்தியாவில் உள்ள சுமார் 24.7 கோடி மாணவர்கள் மற்றும் 1 கோடிக்கும் அதிகமான ஆசிரியர்களைக் கொண்ட பிரம்மாண்ட கல்விச் சூழலில், ஏஐ விழிப்புணர்வு மற்றும் டிஜிட்டல் கல்வியறிவை (AI Literacy) மேம்படுத்தும் நோக்கில் கூகுள் நிறுவனம் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் யுனிசெஃப் (UNICEF) அமைப்புடன் புதிய மெகா கூட்டணிகளைப் புதன்கிழமை (மே 19, 2026) அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டீச்சர்களுக்கு என்ன ஜாக்பாட்?

கூகுள் ஏஐ எஜுகேட்டர் தொடர் (GES): அமெரிக்காவில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் இந்த ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை கூகுள் தற்போது இந்தியாவிற்கு முதன்முறையாகக் கொண்டு வந்துள்ளது.

ADVERTISEMENT

6 வட்டார மொழிகளில் அசத்தல்: நம்ம ஊர் டீச்சர்களுக்குப் புரியும் வகையில், முதலாம் ஆண்டு முன்னோட்டத் திட்டமாக (Pilot Project) இந்த ஏஐ பயிற்சித் தாள்கள் இந்தி, மராத்தி, தெலுங்கு, பஞ்சாபி, ஒடியா மற்றும் அஸ்ஸாமி ஆகிய 6 இந்திய மொழிகளில் உள்ளூர்மயமாக்கப்பட்டு முழுமையாக வழங்கப்பட உள்ளது.

மொபைல் வழிக் கற்றல் (Mobile-First): ஆசிரியர்கள் தங்களது வேலைப் பளுவிற்கு இடையிலும் எளிமையாகக் கற்கும் வகையில், மொபைல் போன் மூலமாகவே படித்துப் பயிற்சி பெறும் ‘மொபைல்-பிரண்ட்லி’ வடிவில் இந்த முழுப் பாடத்திட்டமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முதற்கட்ட மாநிலங்கள்: கூகுள் நிறுவனம் இதற்காக முதற்கட்டமாக மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், அஸ்ஸாம் மாநில அரசுகள், லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் பஞ்சாப் பள்ளி கல்வி வாரியத்துடன் நேரடி ஒப்பந்தம் செய்துள்ளது பாஸ்! மேலும், நாடு முழுவதும் உள்ள 40,000 கேந்திரிய வித்யாலயா (Kendriya Vidyalaya) ஆசிரியர்களுக்கும் இப்பயிற்சி நேரடியாகக் கொண்டு சேர்க்கப்பட உள்ளது.

முறையான பயன்பாடு: வகுப்பறைகளில் ஜெமினி (Gemini) போன்ற ஏஐ டூல்களைப் பயன்படுத்தி, மாணவர்களுக்கான பிரத்யேக பாடத்திட்டங்கள், அசைன்மென்ட்டுகள் மற்றும் கற்றல் திறனை எப்படிப் பொறுப்புடன் (Responsible use of AI) மேம்படுத்துவது என்பது பற்றி இதில் முழுமையாகக் கற்றுத் தரப்படும்.

ADVERTISEMENT
மாணவர்களுக்கான ‘யுனிசெஃப்’ மெகா கூட்டணி

ஆசிரியர்கள் மட்டுமின்றி, மாணவர்களின் அடிப்படை வாசிப்பு மற்றும் கணிதத் திறனை (Literacy & Numeracy) வளர்க்க கூகுள் மற்றும் யுனிசெஃப் இணைந்து 3 ஆண்டுகால பிரம்மாண்ட சர்வதேச திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்தியா, பிரேசில், பாகிஸ்தான் மற்றும் கென்யா ஆகிய 4 நாடுகளில் உள்ள மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட உள்ளன. கூகுளின் ஜெமினி (Gemini), நோட்புக் எல்எம் (NotebookLM) மற்றும் மாணவர்களின் வாசிப்புத் திறனை உச்சரிக்கக் கற்றுத்தரும் புகழ்பெற்ற ‘ரீட்அலாங்’ (ReadAlong) போன்ற ஏஐ செயலிகள் பள்ளி பாடத்திட்டங்களில் பாதுகாப்பான முறையில் ஒருங்கிணைக்கப்படும்.

இதுதவிர, இந்தியாவில் உள்ள சுமார் 7.5 கோடி மாணவர்கள் மற்றும் 18 லட்சம் கல்வியாளர்களுக்குத் தகுந்தவாறு மாறும் கற்றல் (Adaptive Learning) முறையை விரிவுபடுத்த ‘வாத்வானி ஏஐ’ (Wadhwani AI) அமைப்புக்கு கூகுள்.ஆர்க் (Google.org) சார்பாக ரூ. 85 கோடி (10 மில்லியன் டாலர்) மெகா மானியம் வழங்கப்பட்டுள்ளது.

கூகுளின் இந்த அதிரடி ஏஐ கல்வித் திட்டம், இந்தியாவின் தேசிய கல்விக்கொள்கை 2020-ன் இலக்குகளுக்கு இணையான, தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வி மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாட்டிற்கு (Teacher Capacity Building) மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும் பாஸ்.

கூகுள் இந்த ஏஐ கல்வி வடிவமைப்பை மாணவர்களை மையப்படுத்தி உருவாக்காமல், ஆசிரியர்களை முதன்மைப் புள்ளியாக (Primary point of control) வைத்தே உருவாக்கியுள்ளது. அதாவது வகுப்பறையைத் திட்டமிடுதல், மாணவர்களை மதிப்பீடு செய்தல் போன்ற ஆசிரியர்களின் வேலைகளை எளிதாக்கவே இந்த ஏஐ முக்கியமாக உதவும்.

இந்தியாவின் 10,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்ள ‘அடல் டிங்கரிங் லேப்களில்’ (Atal Tinkering Labs) ஜெமினி ஏஐ தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்டு, தேசிய பாடத்திட்டத்திற்கு (National Curriculum Standards) உட்பட்ட ஒரு பாதுகாப்பான ஏஐ அசிஸ்டெண்ட் மாணவர்களுக்காக உருவாக்கப்பட உள்ளது.

கல்வி உலகத்துல அதுவும் நம்ம இந்தியக் கல்விச் சூழல்ல ஏஐ தொழில்நுட்பத்தை இந்த அளவுக்கு ஆழமாகக் கொண்டு சேர்க்க கூகுள் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, எதிர்காலத் தலைமுறையை பக்கா ‘ஃபியூச்சர் ரெடி’யாக மாற்றப்போகுது பாஸ். ஏஐ-யை வெறும் சாட்பாட்டாகப் பார்க்காமல், கற்றலுக்கான ஒரு மாஸ் டூலாக மாற்றுவது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கரியரை வேற லெவலுக்குக் கொண்டு போகும். மாற்றங்களை ஏத்துக்கிட்டு, ஏஐ டூல்களை முறையா பயன்படுத்தக் கத்துக்கிட்டா, இந்த 2026-ல நம்ம ஊர் அரசுப் பள்ளி மாணவர்களும் உலகத்தரத்தில் மாஸ் காட்டலாம்!

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share