முதல்வராக ’போர்ஜரி’ ‘420’ வேலை செய்யும் விஜய்.. சும்மாவிடமாட்டேன்… விஜய் ஆட்சி அமைத்தால் பேரழிவுதான்.. டிடிவி தினகரன் எச்சரிக்கை

Published On:

| By Mathi

TTV Dhinakaran Press Meet May 9

அமமுக எம்.எல்.ஏ. காமராஜிடம் பேரம் பேசிய தவெக தலைவர் விஜய்யை சும்மா விட்டுவிடமாட்டேன் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:

ADVERTISEMENT
  • அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் கையெழுத்திடுவதாக தவெக வெளியிட்ட வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டது.
  • காமராஜ் கையெழுத்திடும் வீடியோ உண்மை எனில் அந்த ஒரிஜினல் வீடியோ எங்கே?
  • காமராஜ் காரில் கையெழுத்திடுகிறார் எனில் அவரை வீடியோ எடுத்தது விஜய்யா? ஆதவ் அர்ஜூனா? சிடி நிர்மல்குமாரா? செங்கோட்டையனா?
  • முதலமைச்சராவதற்கே இத்தனை போர்ஜரி, 420 வேலை செய்கிறீர்கள்.. ஆட்சி அதிகாரம் வருவதற்கு முன்னரே இத்தனை திமிரா, அகம்பாவமாக செயல்படுகிறார் விஜய்..
  • விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு பேரழிவு.
  • காமராஜ் எம்.எல்.ஏ. கையெழுத்திட்டு கடிதம் கொடுத்திருக்கிறார் எனில் அந்த ஒரிஜினல் கடிதத்தை விஜய் வெளியிடுவாரா?
  • காமராஜ் எம்.எல்.ஏ.விடம் கையெழுத்து வாங்கி இருந்தால் அவரை மிரட்டி – குதிரை பேரம் மூலம் தவெகவுக்கு ஆதரவளிக்க வைக்கலாம் என திட்டமிட்டிருந்தனர்.
  • இந்த போர்ஜரி கடிதம் குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளோம்.
  • காங்கிரஸ் கட்சியுடன் நீண்டகாலம் இருந்ததால் அவர்களைப் போல விஜய்க்கு இடதுசாரிகள் ஆதரவு தந்துவிட்டனர்.
  • விஜய் கொடுத்திருக்கும் அனைத்து ஆதரவு கடிதங்களையும் ஆளுநர் அர்லேகர் ஆராய வேண்டும்.
  • ஜனநாயகத்தில் ஆதரவை தாருங்கள் என தலைவர்களிடம் நேரில் கேட்க வேண்டுமே தவிர போர்ஜரி கடிதங்கள் மூலம் ஆதரவை உருவாக்கக் கூடாது. இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share