கே.என்.நேரு தொடர்புடைய 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை- திருச்சியில் திரண்ட திமுக தொண்டர்கள்!

Published On:

| By Mathi

கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று (செப்டம்பர் 5) காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை அடையாறு, திருவான்மியூர், ஆர்.ஏ.புரம் பகுதிகளில் கே.என்.நேரு, அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு சொந்தமான 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்துகின்றனர். இதேபோல திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேரு வீடு உள்ளிட்ட இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

திரண்ட திமுக தொண்டர்கள்

இதனிடையே திருச்சி தில்லைநகரில் உள்ள கே.என்.நேரு வீடு முன்பாக காலை முதலே திமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர். அப்போது, அனைவரையும் திமுக கட்சி அலுவலகத்துக்கு செல்லுமாறு கே.என்.நேரு கேட்டுக் கொண்டார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share