வெளிநாட்டு செலாவணியைச் சேமிக்க உதவும் வகையில், மக்கள் மீண்டும் வீட்டிலிருந்தே பணிபுரியும்- Work from home முறையை கடைபிடிக்கவும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும், திருமணங்களுக்காக தங்கம் வாங்குவதைத் தவிர்க்கவும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெலங்கானாவின் ஹைதராபாத்தில் சுமார் ₹9,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தவற்றைத் தொடங்கி வைத்து பேசுகையில் பிரதமர் மோடி இதனைத் தெரிவித்தார்.
மேலும் கொரோனா காலத்தில், வீட்டிலிருந்தே வேலை செய்வது, ஆன்லைன் கூட்டங்கள், வீடியோ கான்பரன்சிங் போன்ற பல முறைகளை நாம் பின்பற்றினோம். அவற்றுக்கு நாம் பழகியும் இருந்தோம், இன்று, அந்த நடைமுறைகளை மீண்டும் தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும், ஏனெனில் இது தேச நலனுக்கு உகந்தது. அவற்றுக்கு நாம் மீண்டும் முன்னுரிமை அளிக்க வேண்டும்,” என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
அதே போல, “பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். தேசத்தின் பொருளாதார அழுத்தத்தைக் குறைக்க மக்கள் தங்களின் விருப்பச் செலவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
“திருமணங்களுக்காக ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று நான் மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்” என்றும் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
