டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் போலீஸ் தடையை மீறி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த முயன்றதால் தலைநகரம் பெரும் போர்க்களமானது.
மே 2026-ல் இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த், போராட்டக்காரர்கள் மற்றும் வேலையில்லா இளைஞர்களை ‘காக்ரோச்’ (கரப்பான் பூச்சிகள்) என்று குறிப்பிட்டதை அடுத்து, அந்தப் பெயரை ஏளனமாகத் தழுவி அபிஜீத் திப்கே என்பவரால் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இது தொடக்கத்தில் கிண்டலான அமைப்பாகத் தொடங்கி, தற்போது மத்திய அரசுக்கு எதிரான வலிமையான இளைஞர் இயக்கமாக உருவெடுத்துள்ளது.



கோரிக்கை என்ன?
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் காக்ரோச் ஜனதா கட்சியின் முதன்மையான கோரிக்கை.
சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்
இந்த கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், ஜூலை 18-ந் தேதி டெல்லி காவல்துறையால் வலுக்கட்டாயமாக சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது போராட்டக்காரர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றம் நோக்கி பேரணி
இதனைத் தொடர்ந்து ஜூலை 18-ந் தேதி முதல் அபிஜீத் திப்கே தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. அத்துடன் இன்று ஜூலை 20-ந் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் டெல்லியில் ஜந்தர் மந்தர், நாடாளுமன்ற வளாகம் மற்றும் முக்கிய மெட்ரோ நிலையங்களான ஜன்பத், ராஜீவ் சௌக், பட்டேல் சௌக் போன்றவை பாதுகாப்பு கருதி மூடப்பட்டன.



தடையை மீறி பேரணி
இன்று காலை தடையை மீறி காக்ரோச் ஜனதா கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயன்றதால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தியும், சரமாரியாக கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர்.
போராட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர். டெல்லியின் முக்கிய பகுதிகளில் 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது.
பேரணியின் போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்தனர், அவர்களுக்கு அங்கேயே முதலுதவி அளிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தின் தடுப்புகளைத் தகர்க்க முயன்றபோது தடியடி நடத்தப்பட்டது.
ஜேபி நட்டாவுடன் சந்திப்பு
இதன் பின்னர் காக்ரோச் ஜனதா கட்சியின் பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை அடங்கிய மனுவை அளித்தனர். போராட்டத்தைக் கைவிட்டு இயல்புநிலை திரும்ப ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
அமித்ஷாவுடன் தர்மேந்திர பிரதான் ஆலோசனை
இதற்கிடையே, அமித் ஷா மற்றும் தர்மேந்திர பிரதான் இடையிலான ஆலோசனை மூன்றரை மணி நேரம் நடைபெற்றது. இதனால் தர்மேந்திர பிரதான் பதவி விலகலாம் அல்லது வேறு துறை அமைச்சராக மாற்றப்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
சோனம் வாங்சுக்கை விடுதலை செய்ய வேண்டும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தேர்வு suicides-ல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்பவைதான் காக்ரோச் ஜனதா கட்சியின் முக்கிய கோரிக்கைகள்.
டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை
இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது. அவர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படுவது குறித்த வழக்கு நாளை மீண்டும் விசாரிக்கப்படும்.

சபனா ஆஸ்மி, பிரகாஷ் ராஜ்.. ஆதரவு தந்த தலைவர்கள்
டெல்லியில் இன்று காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்திய இந்தப் போராட்டத்துக்கு சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ், சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, பிருந்தா காரத், ஆர்ஜேடி மனோஜ் ஜா உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்தனர். சமூக ஆர்வலர். மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைக்க முன்னின்று செயல்பட்டார். மூத்த நடிகை மற்றும் சமூக ஆர்வலர். உண்ணாவிரதத்தில் இருந்த மாணவர்களிடம் கோரிக்கைகளை ஏற்கும் உறுதி அளிக்கச் சென்ற குழுவில் இருந்தார். நடிகர் பிரகாஷ் ராஜ், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த குழுவில் இடம்பெற்றிருந்தார்.
உண்ணாவிரதம் முடிவு
காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, கடந்த ஜூலை 18-ம் தேதி முதல் தொடங்கிய உண்ணாவிரதத்தை, நாடாளுமன்றம் நோக்கிய பேரணிக்கு முன்னதாக ஜந்தர் மந்தரில் இன்று முடித்துக் கொண்டார்.
சோனம் வாங்சுக்குடன் இணைந்து 23 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த மூன்று மாணவர் அமைப்பினர் (AISA), சபானா ஆஸ்மி, பிரகாஷ் ராஜ், மனோஜ் ஜா, ராஜாராம் சிங், அம்ரா ராம், யோகேந்திர யாதவ் மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் அடங்கிய குழுவின் கோரிக்கையை ஏற்று தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதனிடையே சமூக வலைதளங்களில் பரவிய “கீதாஞ்சலி என்ற 12 வயது சிறுமி தாக்கப்பட்டார், அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது” என்ற செய்தியை டெல்லி காவல்துறை அதிகாரப்பூர்வமாக ‘பொய்’ என்று மறுத்துள்ளது. தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
பதற்றமான நாடாளுமன்றம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இந்தப் போராட்டம் நடைபெற்றதால், வளாகத்தின் கதவுகள் மூடப்பட்டு, பாதுகாப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது, வழக்கத்தை விடக் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியது.
