Covid19: ஆந்திராவை அலற வைக்கும் ‘கொரோனா பேரன்’ சிக்காடா!

Published On:

| By Mathi

Covid-19: 'Cicada' Variant, Descendant of Omicron, Causes Alarm in Andhra

ஆந்திராவில் கொரோனா உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவது ஒமிக்ரான் வைரஸின் தொடர்ச்சியான சிக்காடா (Cicada) என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆகவும் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆகவும் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

கொரோனா பாதிப்புடன் உயிரிழந்தவர்கள் அனைவரும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் போன்ற இணை நோய்களைக் கொண்டிருந்தனர்.

தற்போதைய நிலையில் பரவல் இல்லாத கொரோனா பாதிப்பு நிலவரம்

ADVERTISEMENT
  • கேரளா 115
  • கர்நாடகா 64
  • மகாராஷ்டிரா 43
  • தமிழ்நாடு 39
  • அந்தமான் 18
  • டெல்லி 18
  • ராஜஸ்தான் 12

உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, இந்தியாவின் கொரோனா தொற்று உறுதித்தன்மை விகிதம் 5.3 சதவீதமாக உள்ளது.

தற்போதைய பாதிப்புக்கு காரணமான Omicron BA.3.2 வைரஸை விஞ்ஞானிகள் ‘சிக்காடா’ (Cicada) என்று அழைக்கின்றனர். இது 2022-ல் அமைதியாக இருந்து, 2024-ல் திடீரென அச்சத்தை ஏற்படுத்திய ஒமிக்ரான் வரிசையில் உருவானது. இருப்பினும் இது அச்சமூட்டும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.

ADVERTISEMENT

‘சிக்காடா’ பாதிப்பு 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை தாண்டிச் செல்லும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.

இதேபோல், ‘நிம்பஸ்’ (Nimbus) எனப்படும் NB.1.8.1 வைரஸும் கண்காணிப்பில் உள்ளது; இது தடுப்பூசி செலுத்தியவர்களையும் பாதிக்கக்கூடும் என்று WHO எச்சரிக்கிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share