தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, கோவை உள்ளிட்ட ஆறு கோட்டங்களுக்காக வாங்கப்பட்டுள்ள 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவையைத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று (ஜூன் 25) தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், புதிய பேருந்துகளின் இயக்கத்தைக் கொடியசைத்து முதல்வர் தொடங்கி வைத்தார்.
பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த அவர், நடத்துனரிடம் உரிய கட்டணத்தைச் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொண்டார். பேருந்து பயணத்தின் போது சக பயணிகளுடனும், பொதுமக்களுடனும் தனது செல்போனில் செல்ஃபி மற்றும் வீடியோக்களை எடுத்துக்கொண்டார். மேலும், பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் கலந்துரையாடினார்.
தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்ட அந்தப் பேருந்திலேயே கலங்கரை விளக்கம் வரை சென்ற முதல்வர் விஜய், பின்னர் அதே பேருந்திலேயே மீண்டும் தலைமைச் செயலகம் திரும்பினார்.
