கலைஞரின் பெயரை குறிப்பிட்டு அமைச்சர் பேச்சு- ’Sorry’ கேட்ட முதல்வர் விஜய்

Published On:

| By Mathi

CM Vijay Expresses Regret for Mentioning Kalaignar's Name

தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயரை குறிப்பிட்டு வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் பேசியதற்காக முதல்வர் விஜய் வருத்தம் தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 17) பேசிய வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், முன்னாள் முதல்வர் கலைஞரை குறிப்பிடும் போது அவரது பெயரைக் குறிப்பிட்டு விமர்சித்தார். இதற்கு சபையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை தாக்கல் செய்ய எழுந்த முதல்வர் விஜய், ”உங்க தலைவரின் பெயரை குறிப்பிட்டு பேசியது (முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயரை) தவறுதான்.. அவர் சார்பாக நான் Sorry கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share