விஜய் அரசே! தொழிலாளர் கொள்கை என்ன? நெருக்கடி தரும் சிபிஎம்!

Published On:

| By Mathi

CITU Pressures to Release Vijay Govt's Labour Policy

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தமது தொழிலாளர் கொள்கை என்ன என்பதை உடனே வெளியிட வேண்டும் என்று சிபிஎம்-ன் தொழிற்சங்கமான சிஐடியு வலியுறுத்தி உள்ளது.

சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ. சவுந்தரராசன் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு தனது தொழில் கொள்கையைப் போல, தொழிலாளர்களுக்கான தனித்துவமான ‘தொழிலாளர் கொள்கையை’ வெளியிட வேண்டும்.

ADVERTISEMENT

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 68 விழுக்காடு பங்களிப்பை வழங்கும் முறைசாரா தொழிலாளர்களுக்கு எவ்வித சமூக பாதுகாப்பும் இல்லை.

அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச மாத ஊதியமாக ரூ.26 ஆயிரத்தை அரசுத்துறைகளே அமல்படுத்த மறுக்கின்றன. முதலமைச்சர் ஜோசப் விஜயைச் சந்தித்த போது, தமிழகத்தில் உள்ள ஒரு கோடி முறை சாரா தொழிலாளர்களுக்குக் குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரம் கூடுதலாக வழங்க உத்தரவிடக் கோரினோம். இதனால் மக்களின் பணப் புழக்கம் அதிகரித்து பொருளாதாரம் வளரும்.

ADVERTISEMENT

ஆலைகளில் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. கூட்டுபேர உரிமை என்பதை கூட்டு பிச்சை எடுப்பதாக அரசு கருதக்கூடாது.

ஊழலற்ற ஆட்சிக்கான முயற்சிகளுக்குத் துணை நிற்போம்; அதே நேரம் உரிமைகள் பறிக்கப்படும்போது போராடுவோம். ஆகையால் தமிழக அரசு உடனடியாகத் தொழிலாளர் கொள்கையை வெளியிட வேண்டும். இவ்வாறு அ.சவுந்தரராசன் வலியுறுத்தி உள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share