வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னையின் 15 மண்டலங்களிலும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மண்டத்திற்கும் தலா 1 ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, ரூ.42 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 5 மாவட்டங்களில் உள்ள 202 இடங்களில் தீவிர தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மண்டலம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள்
- மண்டலம் 1. திருவொற்றியூர் – கே. பாலசுப்பிரமணியம்
- மண்டலம் 2. மணலி – பி. குமரவேல் பாண்டியன்
- மண்டலம் 3. மாதவரம் – எஸ். அருண்ராஜ்
- மண்டலம் 4. தண்டையார்பேட்டை – ஆர். கண்ணன்
- மண்டலம் 5. ராயபுரம் – ஆஷா அஜித்
- மண்டலம் 6. திரு.வி.க. நகர் – பி. கணேசன்,
- மண்டலம் 7. அம்பத்தூர் – கே. விவேகானந்தன்,
- மண்டலம் 8. அண்ணாநகர் – பி. காயத்ரி கிருஷ்ணன்
- மண்டலம் 9. தேனாம்பேட்டை – டி. கிறிஸ்துராஜ்
- மண்டலம் 10. கோடம்பாக்கம் – எஸ். கோபால சுந்தர ராஜ்
- மண்டலம் 11. வளசரவாக்கம் – டாக்டர் ஜெ. விஜயா ராணி
- மண்டலம் 12. ஆலந்தூர் – வாகே சங்கெத் பால்வந்த்
- மண்டலம் 13. அடையாறு – டாக்டர் கே. செந்தில் ராஜ்
- மண்டலம் 14. பெருங்குடி – மகேஸ்வரி ரவிக்குமார்
- மண்டலம் 15. சோழிங்கநல்லூர் -டி. பாஸ்கர பாண்டியன்
