தமிழ்நாட்டின் முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் இன்று மே 10-ந் தேதி பதவியேற்றார்.
சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தின் முதல்வராக ஜோசப் விஜய் என்ற விஜய் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்வி அர்லேகர் பதவியேற்பு பிரமாணம் செய்து வைத்தார். விஜய் கறுப்பு நிற கோட் சூட் அணிந்து முதல்வராகப் பதவியேற்றார்.

விஜய்யுடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
