போதைப் பொருள் பயன்படுத்துவதற்கு எதிரான போரை ( Anti-Drug Movement) தாம் நடத்த இருப்பதாக “We the Leaders” அமைப்பின் தலைவர் அண்ணாமலை (Annamalai) அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில் அண்ணாமலை கூறியுள்ளதாவது: போதைப்பொருள் ஒரு பெரிய பிரச்சனை, அது எல்லோரையும் பாதிக்கிறது; இது உலகம் முழுவதும் நமக்குத் தெரிந்த ஒன்றுதான்.
போதைப்பொருள் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். போதைப் பொருள் பயன்பாட்டில் விநியோகம் மற்றும் தேவை இரண்டு உள்ளது.
விநியோகம் என்றால் போதைப்பொருள் விற்பனையாளர், தேவை என்றால் போதைப்பொருள் வாங்குபவர் என்று அர்த்தம்.
விநியோகத்தை எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் புதிதாக ஒரு விநியோகஸ்தர் வந்துவிடுவார்.
ஆனால், தேவையைக் கட்டுப்படுத்தினால், ஒரு மாணவனோ அல்லது ஒரு மனிதனோ “நான் போதைப்பொருள் எடுக்க மாட்டேன்” என்று முன்வந்தால், போதைப்பொருள் பயன்பாடு குறையும்.
இதுதான் உலகம் முழுவதும், அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நடந்துள்ளது.
அதை “We The Leaders” என்ற இயக்கத்தின் மூலம் நாம் கையில் எடுப்போம்.
அதை எங்களுடைய தன்னார்வலர்கள் மூலம் முன்னெடுத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
நாங்கள் அனைத்துப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று, மனநல மருத்துவர்களை அழைத்து வந்து பேச வைப்போம்.
நாங்கள் மறுவாழ்வு மையங்களுக்கும் செல்வோம்.
இதை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக, போதைப்பொருளுக்கு எதிரான ஒரு போராகக் களத்தில் நடத்துவோம்.
சீருடை அணிந்த நமது காக்கி நண்பர்கள், அவர்களின் பணியை அவர்கள் செய்யட்டும்.
போதைப்பொருளுக்கு எதிரான இந்தப் போரை நாங்கள் களத்தில் நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம், அது மிகவும் பெரிய ஒரு விஷயம்.
இவை அனைத்தும் மக்களின் பிரச்சனைகள், இவற்றை மக்களாகிய நாம்தான் தீர்க்க வேண்டும்.
அங்கு சில காவல் அதிகாரிகள் இருக்கிறார்கள், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (Narcotics Control Bureau) இருக்கிறது, காவல்துறை கண்காணிப்பாளர்கள் (SPs) இருக்கிறார்கள், அவர்கள் அவர்களின் வேலையைச் செய்வார்கள்.
அவர்களால் விநியோகத்தை எவ்வளவு திறம்பட கட்டுப்படுத்த முடியுமோ அவ்வளவு கட்டுப்படுத்தட்டும்; அவர்கள் எப்படிச் செய்கிறார்கள் என்பதற்குள் நாங்கள் போக விரும்பவில்லை.
நாங்கள் ஒரு இயக்கமாக, ஒரு தன்னார்வ இயக்கமாக, இதைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுவோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
