விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு தர வேண்டும் என மனநிலை அதிமுகவில் அதிகம் இருப்பதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று மே 6-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய கோவை சத்யன், தவெகவை ஆதரிக்க வேண்டும் என்கிற மனநிலை அதிமுகவில் உருவாகி உள்ளது; தற்போதைய நிலையில் அதிமுகவில் எந்த ஒரு பிரிவினையும் இல்லை. தவெகவை ஆதரிப்பது தொடர்பாக அதிமுக தலைமைதான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
