இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 7 பேர் உயிரிழப்பு- பாதிப்பு எண்ணிக்கை 4,302 ஆக அதிகரிப்பு!

Published On:

| By Minnambalam Desk

India Covid19

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். 7 Deaths in a Single Day Due to COVID-19

இந்தியாவில் பல மாநிலங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் நேற்று மேலும் 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த ஜனவரி1-ந் தேதி முதல் தற்போது வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,302 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 3281 பேர் மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

ADVERTISEMENT

அதேபோல நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 44 ஆகவும் உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு, டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம் மாநிலங்களில் நேற்று கொரோனா இறப்பு பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share