The Rise, GiveLife, THREPI அறக்கட்டளைகள் இணைந்து சென்னை லயோலா கல்லூரி மற்றும் சென்னையின் மனிதவள அமைப்புகளின் ஆதரவுடன் வரும் ஜூலை மாதம் 11ஆம் தேதி சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்துள்ளது.
இம்முகாமில் 550-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளுடன் பங்கேற்கின்றன.
எந்தெந்த துறைகள்?
உற்பத்தி துறை (Manufacturing) சார்ந்து மட்டுமே 200-க்கும் அதிகமான நிறுவனங்களும், ஐ.டி (IT & ITES) துறை சார்ந்து சுமார் 90 நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
வங்கி – நிதி சார் துறைகள், மருத்துவம் – மருந்து பொருட்கள் உற்பத்தி துறை, கல்வி – பயிற்சி துறைகள், சந்தைப்படுத்தல் – விற்பனையாளர்கள் என பல்வேறு துறைகளிலிருந்தும் நிறுவனங்கள் பங்கு பெறுகின்றன.
ஜூலை 11 வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளன்றே குறைந்தபட்சம் 25,000 – பேருக்கேனும் வேலை நியமன ஆணை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வகையில் இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாமாக இது அமையும் எனவும் மதிப்பீடு செய்யப்படுகிறது.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
