குரூப் 1… டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் கவனத்திற்கு…

Published On:

| By Kavi

குரூப் 1 தேர்வுக்கான காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி அதிகரித்துள்ளது.

தமிழக அரசின் உயர் பதவிகளுக்கான குரூப் 1 தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

இந்த ஆண்டு குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. 

துணை ஆட்சியர், உதவி ஆணையர், வணிகவரித்துறை, துணைப் பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட பதிவாளர், தொழிலாளர் பிரிவு உதவி ஆணையர் உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு வரும் செப்டம்பர் 6ம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

கடந்த 2015ல்-74, 2017ல்-85, 2019ல் -181, 2020ல்-66, 2022ல்-93, 2024ல்-90, 2025ல்-78 பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், 2026 இல் வெறும் 26 பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டது தேர்வர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று குரூப் 1 தேர்வுகளுக்கு தயாராகி வந்தவர்களும் அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர்.

ADVERTISEMENT

இந்த சூழலில் கூடுதலாக 20 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு டிஎன்பிஎஸ்சி-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்வோம்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share