சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் : மூன்று நாள் வசூல் எவ்வளவு?

Published On:

| By Kavi

சூர்யா மற்றும் மமிதா  பைஜூ நடிப்பில் வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் மூன்று நாட்களில் ரூ.110.22 கோடி வசூலித்துள்ளது. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓர் இயல்பான குடும்ப கதைக்களத்தில் சூர்யா நடித்துள்ளார்.  கருப்பு பட வெற்றிக்கு பிறகு சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியானது. 

ADVERTISEMENT

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் மூன்று நாட்களில் 110.22 கோடி வசூலித்துள்ளது என்று Sacnilk இணையதளம் தெரிவித்துள்ளது. 

திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை வெளியிட்டு வரும் இந்த இணையதளம்,  ”இந்தியாவில் 3-வது நாளில் இந்த படம் ரூ.20.55 கோடி வசூலித்துள்ளது. இது சனிக்கிழமை வசூலான ரூ.22.25 கோடியை விட 7.6% குறைவாகும். முதல் நாள் ரூ.15.35 கோடி வசூலித்துள்ளது. தமிழ்நாட்டின் வசூல் ரூ.9.50 கோடி ஆகும்.

ADVERTISEMENT

இந்தியாவில் இதுவரை 67.22 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் ரூ.43 கோடியும் வசூலித்துள்ளது. அதன்படி மூன்று நாட்களின் மொத்த வசூல்  110.22 கோடி ரூபாய் ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், ‘ஜனநாயகன்’ 25 நாட்களுக்குப் பிறகு ரூ.321.75 கோடி வசூலை எட்டியுள்ளது. முதல்வர் விஜய் படம்  சிறப்பான தொடக்கத்தை கொடுத்தாலும், அதன் பிந்தைய திரையரங்க ஓட்டத்தில் அதன் வேகம் சற்று குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share