ரூ.10-க்கு “பயணி” குடிநீர் பாட்டில் திட்டம் அறிமுகம்!

Published On:

| By Mathi

SETC Introduces Rs 10 "Payani" Drinking Water Bottle Scheme

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் (SETC) நீண்ட தூரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரூ.10-க்கு “பயணி” (Payani) குடிநீர் பாட்டில் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகமான பல்லவன் இல்லத்தில் நேற்று ஆகஸ்ட் 7-ந் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

கடந்த 2013-ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது பேருந்து நிலையங்களில், அரசு பேருந்துகளில் ரூ10- க்கு “அம்மா குடிநீர்” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது இத்திட்டம். 2016-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த திட்டம் தொய்வடைந்தது. 2020 கொரோனா கால கட்டத்தில் இத்திட்டம் முழுமையாக நிறுத்தப்பட்டது.

தற்போது நீண்ட தூர பேருந்து பயணிகளுக்கு மீண்டும் ரூ10-க்கு ”பயணி” குடிநீர் பாட்டில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share