முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றார்.
முதல்வர் விஜய்யும், சங்கீதாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் நடிகை ஒருவருடன் தனது கணவருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு ஏப்ரல் 20, ஜூன் 15 என இருமுறை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது லண்டனில் இருந்து காணொளி மூலம் சங்கீதா ஆஜரானார். சட்டமன்றம் நடப்பதால் முதல்வர் விஜய் ஆஜராகவில்லை.
இன்றைய விசாரணையின் போது சங்கீதா 20 நிமிடங்கள் தனது தரப்பு வாதத்தை முன் வைத்தார். அதைத்தொடர்ந்து வழக்கு இன்றைய தினமே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்தநிலையில் சங்கீதா தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளார். இதனால் வழக்கை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
