பாக். பெண்கள் கிரிக்கெட் அணி சென்னை வந்தது!

Published On:

| By Balaji

பெண்களுக்கான உலக கோப்பை டி- 20 போட்டி, மார்ச் 10ம் தேதி துவங்கியது. பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளிடையேயான போட்டி வரும், மார்ச் 16ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் கிரிக்கெட் வீரர்கள் முன்கூட்டியே சென்னை வரவேண்டியது. ஆனால், தங்கள் நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்று கூறி, ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு அனுப்புவதை நிறுத்தி வைத்தனர். இந்நிலையில், பெண் கிரிக்கெட் வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share