தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் வினோத் இன்று (ஆகஸ்ட் 6) வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அதில், மண்வள பாதுகாப்புக்காக சிறப்பு ஐந்தாண்டு திட்டம் தீட்டப்பட்டு அதற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயறு வகைகள், எண்ணெய் வித்துப்பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கத்திற்காக ரூ.203.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இலவச மும்முனை மின்சாரம் திட்டத்திற்கு கட்டண தொகையாக மின்வாரியத்திற்கு ரூ.7,432.58 கோடி வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
