தமிழகத்தில் ‘பன்றி காய்ச்சல்’ பாதிப்பு அதிகரிப்பு… தடுப்பூசி போடப்படுமா?

Published On:

| By Mathi

Rising Cases of 'Swine Flu' in Tamil Nadu: Will Vaccination?

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடப்படுமா? என்பது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 27) திமுக எம்.எல்.ஏ. லட்சுமணன் எழுப்பிய கேள்வி: தமிழகத்தில் விரைந்து பரவிவரும் H1N1 காய்ச்சலை கட்டுப்படுத்த, முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்காவது தடுப்பூசி போடும் திட்டம் அரசிடம் உள்ளதா என்பதை அறிய விரும்புகிறேன்.

ADVERTISEMENT

அமைச்சர் அருண்ராஜ் அளித்த பதில்: H1N1 காய்ச்சல் தற்போது கட்டுப்பாட்டில்தான் உள்ளது, மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

கடந்த ஆண்டில் முதல் 4 மாதங்களில் காய்ச்சல் அதிகமாக இருந்தது (ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்). இந்த ஆண்டு மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் அது கட்டுக்குள்தான் உள்ளது; நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

ADVERTISEMENT

முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள்தான் இந்த நோயால் அதிகமாக பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதால், அது குறித்து ஆய்வு செய்து தேவைப்பட்டால் கண்டிப்பாகத் தடுப்பூசி போடுவதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share