உங்கள் வீட்டில் யாரிடமாவது இன்னும் 2,000 நோட்டு இன்னும் இருக்கிறதா? அப்படியென்றால், கவலைப்படத் தேவையில்லை. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2,000 ரூபாய் நோட்டுகள் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த நோட்டு தொடர்ந்து செல்லுபடியாகும் சட்டப்பூர்வமான பணமாகவே (legal tender) இருக்கும் என்று RBI தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது அதன் சட்டப்பூர்வ அங்கீகாரம் அப்படியே உள்ளது.
எத்தனை நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன?
2023 மே 19ஆம் தேதியன்று இந்த நோட்டுகளைச் செல்லாததாக்குவதாக RBI அறிவித்தபோது, மொத்தம் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2026 ஏப்ரல் மாத இறுதியில், வெறும் ரூ.5,451 கோடி மதிப்பிலான நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. அதாவது, 98.47% நோட்டுகள் வெற்றிகரமாக வங்கி அமைப்புக்குத் திரும்பியுள்ளன.
நேரடியாக RBI அலுவலகத்தில் செல்லுதல்:
உங்களிடம் இன்னும் இந்த 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால், நாடு முழுவதும் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் 19 வெளியீட்டு அலுவலகங்களில் (issue offices) எங்கு வேண்டுமானாலும் அவற்றை எளிதாக மாற்றிக்கொள்ளலாம். இங்கு எந்தவிதச் சிரமமும் இன்றி உங்கள் நோட்டுகள் மாற்றிக் கொடுக்கப்படும்.
வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்துதல்:
வேறு பணமாக மாற்றிக்கொள்ள விரும்பவில்லை என்றால், இந்த 19 RBI அலுவலகங்களும் மற்றொரு சிறந்த வசதியை வழங்குகின்றன. உங்கள் 2000 ரூபாய் நோட்டுகளை அங்குள்ள RBI அலுவலகத்தில் கொடுத்து, உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தவும் செய்யலாம். அந்தத் தொகை நேரடியாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
தபால் மூலம் அனுப்புதல்:
உங்கள் நகரத்தில் RBI அலுவலகம் இல்லையென்றால் அல்லது உங்களால் அங்கு நேரில் செல்ல முடியவில்லை என்றால், இந்திய அஞ்சல் துறை மூலம் அனுப்புவதே எளிதான வழியாகும். நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள அருகிலுள்ள அஞ்சல் நிலையத்திற்குச் சென்று, இந்திய அஞ்சல் துறை மூலம் ஏதேனும் ஒரு RBI வெளியீட்டு அலுவலக முகவரிக்கு உங்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை அனுப்பலாம். உங்கள் நோட்டுகள் அங்கு சென்றடைந்ததும், அதற்கான தொகை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.
