தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
மொடக்குறிச்சி வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

2021 தேர்தலில் அதிர்ச்சியான முடிவுகளை தந்த தொகுதிதான் மொடக்குறிச்சி.
திமுகவின் மூத்த தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன், பாஜகவின் சரஸ்வதியிடம் 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இதுக்கு பிறகு சுப்புலட்சுமி ஜெகதீசன் தீவிர அரசியலில் இருந்தே ஒதுங்கிவிட்டார். இந்த முறை மொடக்குறிச்சி தொகுதியில மதிமுகவும் பாஜகவும் மோதுகிறது.
பாஜக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மருமகள் கிருத்திகா போட்டியிடுகிறார். மதிமுகவில செந்தில்நாதன் களம் காண்கிறார்.
தவெக சார்பில் சண்முகம், நாதக சார்பில் அருண் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக (மதிமுக) -45 %
அதிமுக-33%
தவெக-14%
நாதக -7 % வாக்குகள் பெறும்
திமுக கூட்டணி மதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
