சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த 10ம் வகுப்பு 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இடப் பெயர்வு சான்றுகள் இனி டிஜிட்டல் ஆவணங்களாக மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தங்களின் படிப்பை முடிந்த பின் உயர்கல்விக்கு வேறு நிறுவனங்களில் சேர இடம்பெயர்வு சான்றிதழை சமப்பிக்க வேண்டும்.
தற்போது மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களின் கல்வி சார்ந்த சான்றிதழ்களை ஒரே தளத்தில் சேமிக்க, டிஜி லாக்கர் பயன்பாட்டை சிபிஎஸ்இ கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது. இதை பயன்படுத்த மாணவர்களுக்கு ஆறு இலக்க பயனாளி அடையாள எண் வழங்கப்படும்.
இதை பயன்படுத்தி இடம்பெயர்வு சான்றிதழ்கள் தேவைப்படுவோர் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து டிஜி லாக்கர் செயலி வாயிலாக டிஜிட்டல் ஆவணத்தை இலவசமாகவே பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாயமாக காகித நகழ் தேவைப்படுவோர் சிபிஎஸ் இ தளத்தில் டூப்ளிகேட் அகாடமிக் டாகுமெண்ட் சிஸ்டம் என்ற பிரிவில் உள்ள https://cbseit.in/cbse/web/dads/List.aspx என்ற இணையதள இணைப்பின் வாயிலாக விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.
