SRH vs PBKS : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முல்லான்பூரில் நேற்று இரவு நடைபெற்ற 23வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் (21) மற்றும் மார்க்ரமை (0) ஒரே ஓவரில் வெளியேற்றினார் அர்ஷ்தீப் சிங்.
அதற்கு அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்கவீரர் அபிஷேக் சர்மாவும் (16) ஆட்டமிழந்ததால் 39 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து ஹைதராபாத் தடுமாறியது.
அப்போது களமிறங்கிய இளம் வீரர் நித்திஷ் ரெட்டி அதிரடியாக பேட்டை சுழற்ற, மறுபுறம் வந்த ராகுல் திரிபாதி (11) மற்றும் ஹென்றிச் க்ளாஸின் (9) இருவரும் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
எனினும் சுழற்பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த நித்திஷ் ரெட்டி ஐபிஎல் தொடரில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.
சிறிது நேரத்தில் மீண்டும் பந்து வீச வந்த அர்ஷ்தீப் சிங், அந்த ஒரே ஓவரில் அப்துல் ஷமத்(25) மற்றும் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 64 ரன்கள் குவித்த நித்திஷை வெளியேற்றினார்.
இறுதியாக 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது.
பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷிதீப் 4, ஹர்ஷல் படேல் 2, சாம் கரண் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து 183 ரன்களை துரத்திய பஞ்சாப் அணிக்கு, தனது முதல் ஓவரிலேயே ஜானி பேர்ஸ்டோவை டக் அவுட் செய்து அதிர்ச்சி கொடுத்தா கேப்டன் கம்மின்ஸ்.
தொடர்ந்து வந்த பிரப்சிம்ரன் சிங்கை 4 ரன்களிலும், கேப்டன் ஷிகர் தவானை 16 ரன்களிலும் அவுட்டாக்கினார் புவனேஸ்வர் குமார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த சாம் கரண் (29) மற்றும் சிக்கந்தர் ராசா (28) கூட்டணி தலா 2 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்து வெளியேறினர். அவர்களை தொடர்ந்து விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவும் (19) ரன்களில் அவுட்டாக தடுமாறியது பஞ்சாப்.
அந்த நேரத்தில் ஷசாங்க் சிங்குடன் ஜோடி சேர்ந்த அஸ்டோஷ் சர்மா அணியை வெற்றி பெற செய்ய அதிரடியாக பேட்டை சுழற்றினார்.
இதனால் கடைசி ஓவரில் பஞ்சாப்பின் அணிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது.
அந்த ஓவரை உனத்கட் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை அஸ்டோஷ் சர்மா சிக்சருக்கு பறக்கவிட, அதனால் பதறிய உனத்கட் அடுத்தடுத்து 2 வைடுகளை வீசினார். அவர் மீண்டும் 2வது பந்தையும் சிக்ஸருக்கு விரட்டினார் அஸ்டோஷ் சர்மா.
இதனால் கடைசி 4 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அடுத்த 2 பந்துகள் 2,2 என 4 ரன்கள் எடுத்தார். கடைசி 2 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்டது. 5 பந்தை வைடு போட்டாலும், மீண்டும் வீசிய அந்த பந்தில் சிங்கிள் மட்டுமே கொடுத்தார் உனத்கட்.
கடைசி பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சசாங் ஓங்கி சிக்ஸர் அடித்தாலும் 2 ரன்கள் வித்தியாசத்தில் நூலிலையில் வெற்றியை கோட்டை விட்டது பஞ்சாப் கிங்ஸ் அணி.
கடைசி வரை போராடிய சசாங் சிங் (46*), அஸ்டோஷ் சர்மா (33*) ரன்கள் எடுத்தனர். ஹைதராபாத் அணி தரப்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
அணியின் நெருக்கடியான நேரத்தில் களமிறங்கி 64 ரன்கள் குவித்து, 1 விக்கெட் மற்றும் 1 கேட்ச் பிடித்த நித்திஷ் ரெட்டி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
திருமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் ஐ.டி ரெய்டு!
”வாழ்நாளில் அவரை மறக்கவே முடியாது” : ஆர்.எம்.வீ குறித்து ரஜினி, கமல் உருக்கம்!
ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடி வசூலா..? மாஸ் காட்டும் ஜெயம் ரவி