சமீப காலமாக முதலீட்டாளர்கள் தங்கம் பங்குச் சந்தை (Gold Stock Market) மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய மூன்று முதலீட்டு வழிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த மூன்று வழிகளும் சில சமயங்களில் நல்ல வருமானத்தை அளித்தாலும், எதிர்பாராத இழப்புகளையும் அல்லது மதிப்பிழப்பையும் ஏற்படுத்தலாம். எனவே, இவற்றில் உள்ள வாய்ப்புகள் மற்றும் அபாயங்கள் இரண்டையும் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.
தங்கத்தில் முதலீடு:
இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் பற்றிப் பேசப்படும்போதெல்லாம் தங்கம் மிகவும் பொதுவான தேர்வாக இருக்கிறது. அனைவரும் அதை வாங்குவதையே பரிந்துரைக்கின்றனர். தங்கத்தை வாங்குவது என்பது சேமிப்பை முதலீடு செய்வதற்கான ஒரு எளிய வழியாகும். நீண்ட காலத்தில் தங்கம் நல்ல வருமானத்தை அளிக்கிறது. மேலும், இதைத் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக நகைகளாகவும் மாற்றிக்கொள்ளலாம். இருப்பினும், இதிலும் சில அபாயங்கள் உள்ளன.
பங்குச் சந்தை முதலீடு:
தங்கத்தின் விலை பெருளாதாரக் காரணிகளைச் சார்ந்து அமைகிறது. தங்கத்தை நேரடியாக நகை வடிவில் வாங்குவதும் விற்பதும் வெளிப்படைத்தன்மை குறைவானது. இதில் திருட்டு அபாயம் உள்ளது; மற்றும் நிலையான வருமானம் கிடைப்பதில்லை. அதேவேளையில், பங்குச் சந்தையில் முதலீடு செய்வது ஒப்பீட்டளவில் நல்ல வருமானத்தை அளிக்கிறது. இதில் பணமாக்கும் வசதி (liquidity) அதிகம். வெறும் ஆயிரம் ரூபாயைக் கொண்டே முதலீட்டைத் தொடங்கலாம்.
ரியல் எஸ்டேட் முதலீடு:
நீண்ட கால முதலீடுகளுக்கு வரிச் சலுகைகளும் கிடைக்கின்றன. எனினும், பங்குச் சந்தையில் குறுகிய கால முதலீடுகள் அதிக ஆபத்து நிறைந்ததாக இருக்கலாம். இது அதிக ஏற்ற இறக்கம் கொண்டது. சரியான பங்குகளைத் தேர்ந்தெடுப்பதும், சந்தையின் போக்கைச் சரியாகக் கணிப்பதும் கடினமான ஒன்றாகும். அதேசமயம், ரியல் எஸ்டேட் முதலீட்டில் உள்ள ஒரு சாதகமான அம்சம் என்னவென்றால், அதில் அதிக ஏற்ற இறக்கம் இருப்பதில்லை. சொத்துக்களின் மதிப்பு பொதுவாக உயர்கிறது. வாடகைக்கு விடுவது எளிது மற்றும் அது நிலையான வருமானத்தை அளிக்கிறது.
பார்த்து முதலீடு செய்யலாம்:
இருப்பினும், ரியல் எஸ்டேட் முதலீட்டிற்கு அதிக அளவிலான மூலதனம் தேவைப்படுகிறது. பதிவு மற்றும் முத்திரைத் தீர்வைக் கட்டணங்கள் (stamp duty) பரிவர்த்தனைச் செலவுகளை அதிகரிக்கின்றன. பராமரிப்புச் செலவுகள் அதிகமாக இருக்கலாம்; மேலும், சொத்தை விரைவாக விற்றுப் பணமாக்குவதும் கடினமான ஒன்றாகும். எனவே முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்த மூன்று விஷயங்களிலும் உள்ள லாப நஷ்டம் குறித்து ஆராய்ந்து பார்த்து முதலீடு செய்யலாம்.
