தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் கோபிசெட்டிப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
கோபிசெட்டிப்பாளையம் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

தமிழ்நாடு ரொம்பவே எதிர்பார்க்கிற தொகுதி கோபிசெட்டிப்பாளையம். இந்த தொகுதியில 8 முறை வெற்றி பெற்ற அதிமுகவின் மூத்த தலைவராக இருந்த கே.ஏ.செங்கோட்டையன் இந்த முறை தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக களம் காண்கிறார்.
1980-ம் ஆண்டு எம்ஜிஆர் காலம் முதல் கோபியை கோட்டையாக வைத்திருப்பவர் செங்கோட்டையன்.
1996-ல் திமுகவின் ஜிபி வெங்கிடு, செங்கோட்டையனை வீழ்த்தியவர்.
1977-க்குப் பின் கோபி தொகுதியில 11 தேர்தல்கள் நடந்திருக்கு.
இதுல மொத்தம் 10 முறை அதிமுகதான் ஜெயிச்சிருக்கு.
இந்த முறை திமுக வேட்பாளராக நல்லசிவம், அதிமுக வேட்பாளராக பிரபு ஆகியோர் களம் காண்கின்றனர்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக – 36%
அதிமுக – 30%
தவெக- 26%
நாதக-6% வாக்குகள் பெறும்
திமுக வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
