பழைய நகைகளைக் கொடுத்து புதியதாக மாற்றும் இந்தியர்கள்: மாறும் டிரெண்ட்!

Published On:

| By Santhosh Raj Saravanan

Exchange rates of gold have increased by a massive 60 percent

இந்தியாவில் அதிகரித்து வரும் தங்க விலை நுகர்வோரின் வாங்கும் முறைகளை மாற்றியுள்ளது. மக்கள் இப்போது பணத்தைச் செலவழிப்பதற்குப் பதிலாக பழைய நகைகளைக் கொடுத்துப் புதிய நகைகளைப் பெற (Exchange rates of gold) விரும்புகிறார்கள். நகை வியாபாரிகளின் கூற்றுப்படி, பழைய தங்கத்தைக் கொடுத்துப் புதிய நகைகளைப் பெறும் பரிவர்த்தனைகள் ஆண்டுக்கு ஆண்டு சுமார் 60% அதிகரித்துள்ளன. அதிக தங்க விலை இறக்குமதி வரிகள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவை இந்தப் போக்கிற்கு உந்துதலாக உள்ளன.

நம் நாட்டின் முன்னணி நகை சில்லறை விற்பனை நிறுவனமான ஜோஸ் அலுக்காஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் தங்கப் பரிமாற்றத் திட்டங்களின் பங்கு முன்பு 40 முதல் 45% ஆக இருந்த நிலையில், தற்போது 65% ஆக உயர்ந்துள்ளது. சில நாட்களில், நிறுவனத்தின் வணிகத்தில் 70% வரை பழைய தங்கப் பரிமாற்றத்தின் மூலமே வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல, கல்யாண் ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் ரமேஷ் கல்யாணராமன் கூறுகையில், தனது நிறுவனத்தில் பரிமாற்றம் அடிப்படையிலான விற்பனையின் பங்கு 30% இலிருந்து 45% ஆக அதிகரித்துள்ளதாகக் கூறினார். பிரதமரின் வேண்டுகோளைத் தொடர்ந்து, அந்நிறுவனம் சிறப்புத் தங்கப் பரிமாற்றப் பிரச்சாரங்களையும் தொடங்கியுள்ளது.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அரசாங்கம் உயர்த்தியதாலும், தங்கத்தின் விலையில் ஏற்பட்ட கடுமையான உயர்வினாலும் இந்தப் போக்கு வலுப்பெற்றுள்ளதாகத் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு வருடத்திற்கு முன்பு 10 கிராமுக்கு சுமார் ரூ. 1 லட்சமாக இருந்த 24 காரட் தங்கத்தின் விலை, வியாழக்கிழமையன்று கிட்டத்தட்ட ரூ. 1.56 லட்சத்தை எட்டியது. இத்தகைய சூழலில், பழைய நகைகளின் மதிப்பைப் பயன்படுத்தி புதிய நகைகளை வாங்குவது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியான மற்றும் செலவு குறைந்த ஒரு தேர்வாக மாறியுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share