Esakki Subbiah Petition: தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையா தமது பதவி விலகல் கடிதத்தை நிறுத்தி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக அதிமுக எம்.பி. இன்பதுரை கூறுகையில், ”தனது ராஜினாமாவை நிறுத்தி வைத்து, மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தன்னை செயல்பட அனுமதிக்க வேண்டும் என கடந்த 29.08.2026 அன்று சபாநாயகரிடம் மனு அளித்துள்ளதாக இசக்கி சுப்பையா, உயர்நீதிமன்றத்தில் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
வழக்கு விசாரணையின்போது, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அந்த மனுவை ஏற்க மறுப்பதாகத் தெரிவித்திருந்தாலும், விஜய் அரசின் “அரசியல் தூண்டுதல் (Political Inducement)” மற்றும் “குதிரை பேரம்” குறித்து அதிமுக தொடர்ந்து எழுப்பிவரும் குற்றச்சாட்டுகளை இசக்கி சுப்பையாவின் இந்த கூடுதல் மனு மேலும் உறுதிப்படுத்துகிறது” என கூறியுள்ளார்.
