கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் : மின் வாரியம்!

Published On:

| By Kavi

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் தடைபடுகிறது.

இதனால் சென்னை தொடங்கி திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர், விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டம் நடக்கிறது

ADVERTISEMENT

இந்தசூழலில் மின்வாரியம் இன்று (செப்டம்பர் 13) வெளியிட்ட அறிவிப்பில்,

”தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு உடனடி நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக மின்பற்றாக்குறை ஏதுமின்றி. தற்போது மாநிலம் முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

மின் தொகுப்பு மற்றும் மின்விநியோக நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பதற்காக, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு 24 மணி நேரமும் விழிப்புடன் கண்காணித்து, தேவையான நடவடிக்கைகள் மற்றும் உரிய உத்தரவுகளை உடனுக்குடன் வழங்கி வருகிறது.

மேலும், களப்பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு. சீரான மின்விநியோகத்தினை உறுதிப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

மின்சாரத் துறை சார்ந்த புகார்களுக்கு. 24 மணி நேரமும் செயல்படும் ‘மின்னகம்’ நுகர்வோர் சேவை மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share