பரந்தூர் விமான நிலைய விவகாரம் : சட்டபேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

பரந்துர் விமான நிலையம் திட்டம் குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்த நிலையில் திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர். விமான நிலைய விவகாரம் குறித்துப் பேச சபாநாயகர் அனுமதி அளிக்க வேண்டும் எனத் திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், சபாநாயகர் திமுகவினருக்கு உடனடியாகப் பேச வாய்ப்பு மறுத்தார்.

ADVERTISEMENT

110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், அது குறித்துப் பேச திமுகவினருக்கு அனுமதி அளிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து திமுகவினர் எழுந்து கோஷமிட்டனர். ‘உடனடியாக அனைவரும் வெளியே சென்று கோஷம் எழுப்புங்கள்’ என்று சபாநாயகர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து திமுகவினர் உடனடியாகச் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளியில் செல்லும்போது, ‘அனுமதி கொடு! அனுமதி கொடு!’ என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.”

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share