தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
தாராபுரம் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

தாராபுரம் தனித் தொகுதியில் 2021ல் இப்போது மத்திய அமைச்சரா இருக்கிற எல்.முருகன், திமுகவின் கயல்விழி செல்வராஜிடம் தோற்றார்.
கயல்விழி செல்வராஜ் திமுக ஆட்சியில் அமைச்சரானார். இப்போது கயல்விழி செல்வராஜூக்கு வாய்ப்பு தரப்படவில்லை. எல்.முருகன் இங்கே இருந்து அவிநாசி தொகுதிக்கு மாறிவிட்டார்.
திமுக சார்பில் இந்திராணி, அதிமுக சத்யபாமா, தவெக சார்பில் கவுரி சித்ரா, நாதக சார்பில் திவ்யா ஆகியோர் களம் காண்கின்றனர்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக கூட்டணி- 43%
அதிமுக கூட்டணி – 39%
தவெக- 13%
நாதக – 4% வாக்குகள் பெறும்
திமுக வேட்பாளர் இந்திராணி வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
