சிறையில் நடிகர் தர்ஷனை பயமுறுத்தும் ரேணுகாசாமி ஆவி… திடீரென்று அலறல்!

Published On:

| By Kumaresan M

கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். இவருக்கும் பிரபல நடிகை பவித்ரா கவுடாவுக்கும் தகாத உறவு இருந்தது. இருவருக்குமே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், தங்கள் காதலை தொடர்ந்து வந்தனர்.  இவர்களின் உறவுக்கு தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் பவித்ரா கவுடாவுக்கு, சித்ரதுர்காவை சோ்ந்த ரேணுகாசாமி என்ற தர்ஷனின் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச குறுந்தகவல் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. மேலும், தர்ஷனை அவரின் குடும்பத்துடன் நல்லபடியாக வாழ விடு என்றும் பவித்ராவுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். இதுபற்றி அறிந்த நடிகர் தர்ஷன், கூலிப்படையை ஏவி ரேணுகாசாமியை கடத்தி பெங்களூருவில் வைத்து கொடூரமாக தாக்கி கொலை செய்தார்.

ADVERTISEMENT

ரேணுகாசாமியின் அந்தரங்க பகுதியை எரித்து அணு அணுவாக  கொடுமைப்படுத்தி கொன்றதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.  ரேணுகாசாமியை கொடுமைப்படுத்துவதை பவித்ராவும் அருகில் இருந்து பார்த்து ரசித்துள்ளார். இந்த கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் பெங்களூரு, தும்கூரு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் தர்ஷனும், பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் முதலில் அடைக்கப்பட்டு இருந்தார். இதற்கிடையே, நடிகர் தர்ஷன் சிறைக்குள் நாற்காலியில் சொகுசாக அமர்ந்து கொண்டு சிகரெட் குடிக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.  இதையடுத்து நடிகர் தர்ஷன் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.

ADVERTISEMENT

ரேணுகாசாமியை கொலை செய்தபிறகு, அவரது உடலை மறைக்க கூலிப்படைக்கு லட்சக்கணக்கில் நடிகர் தர்ஷன் பணம் கொடுத்ததாக கூறப்பட்டது. போலீசாரின் விசாரணையிலும், நடிகர் தர்ஷன் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரூ.70 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பெல்லாரி சிறையில் இருக்கும்  நடிகர் தர்ஷனின் கனவில் வந்து ரேணுகாசாமி பயமுறுத்துவதாகவும் இதனால் அடிக்கடி சிறை அறைக்குள் இருந்து தர்ஷனின் கதறல் சத்தம் கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிறை காவலர்கள் சிலர் தர்ஷன் பயந்து போய்  அலறும் சத்தத்தை கேட்டுள்ளனர். இது குறித்து, சிறை அதிகாரிகளிடமும் தர்ஷன் கூறியுள்ளார். தன்னை எப்படியாவது பெங்களுரு சிறைக்கு மாற்றும்படி கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.

ADVERTISEMENT

சமீபத்தில் தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி , தன் மகனுடன் பெல்லாரி சிறைக்கு சென்று சந்தித்தார். அப்போது, அவரிடத்தில் ரேணுகாசாமி கனவில் வந்து பயமுறுத்துவதாக கூறி கதறியுள்ளார். இதையடுத்து, விஜயலட்சுமி பல கோவில்களில் தன் கணவருக்காக பரிகார பூஜை செய்து வருகிறார்.

இந்த நிலையில்,  நேற்று தர்ஷனின்  ஜாமீன் மனு விசாரணக்கு வந்தது. அப்போது, தர்ஷனின் வழக்கறிஞர் ரேணுகா சாமி கனவில் வந்து பயமுறுத்துவதாகவும் நீதிபதியிடம் கூறினார். மேலும், தர்ஷனுக்கு முதுகுவலி இருக்கிறது. எனவே, சிகிச்சை எடுக்க வசதியாக பெங்களுரு சிறைக்கு மாற்றவும் கோரிக்கை விடுத்தார். ஆனால், அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், ஜாமீன் மனு மீதான விசாரணை செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி கூறியுள்ளார்.

ரேணுகாசாமி கொலை விவகாரத்தில் சிக்கி தர்ஷன் சிறையில் இருக்கும் நிலையில்,  அவரின் மனைவி விஜயலட்சுமிதான்  உதவிக்கரமாக இருந்து வருகிறார். இதில், கேலிக் கூத்து என்னவென்றால், நடிகர் தர்ஷனின் காதலியான பவித்ரா அடிக்கடி ஜோடியாக இருக்கும்  புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவார். இதனால், தர்ஷனின் மனைவி கோபமடைந்து கடுமையாக விமர்சனம் செய்ததும் உண்டு . தனது காதலியின் நடவடிக்கைகளை தர்ஷன் தடுத்ததும் இல்லை. மனைவியை மனதளவில் இப்படி கொடுமைப்படுத்திதான் வந்தார். இப்போது, தர்ஷன் காதலியுடன் சிறையில் கிடக்க அவரின் மனைவி விஜயலட்சுமிதான் கணவருக்கு உதவியாக இருந்து வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 ஹரியானா தேர்தல் : 9 மணி நிலவரம் என்ன?

பிரெக் பிடித்த தங்கம் விலை… பொதுமக்கள் ஆசுவாசம்!

Photo of author
Kumaresan M
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share