பாரதத்தின் நுரையீரல் – மத்தியபிரதேசம்

Published On:

| By Minnambalam Login1

BHARAT'S LUNGS
  1. அமித் ஷா current affairs tamil bharat’s lungs
  • ஞாயிற்றுக்கிழமை (14/ 07/24), இந்தூரில் நடைபெற்ற தோட்டக்கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா .BHARAT’S LUNGS
  • அந்த தோட்டக்கலை நிகழ்வில் ஒரே நாளில் நாடுமுழுவதும் 11 லட்சம் மரக்கன்றுகளை நடவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
  • மாநிலங்களுக்கு ஒரு கல்லூரி என, 55 கல்லூரிகளை மெய்நிகர் மூலம் துவக்கி வைத்தார் இந்த கல்லூரிகள் மாநில அரசால் துவக்கிவைக்கப்பட்டு தேசிய கல்விக் கொள்கையின்(2020) கீழ் நடத்தப்படும்.
  • இந்த தோட்டக்கலை நிகழ்ச்சி மத்திய பிரதேஷ் முதல் அமைச்சர் மோகன் யாதவால் இந்த மாதத்தில் துவக்கிவைக்கப்பட்டது “தாயின் பெயரில் ஒரு மரம்”என்று பிரதமர் நரேந்திர மோடி ,ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் அன்று துவக்கிவைத்த நிகழ்ச்சி இது .
  • அமித் ஷா நகரின் ரேவதி ரங்காவில் உள்ள பி.எஸ்.எப் வளாகத்தில் யாதவ் மற்றும் மாநில அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியாஉடன் இணைந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
  • நாட்டின் 12% காடுகளுக்கு,மத்தியப் பிரதேசம் பங்களிக்கிறது என்றும், அந்த மாநிலத்தை பாரதத்தின் நுரையீரல் என்றும் கூறினார். current affairs tamil bharat’s lungs
  • இந்தூரில் மட்டும் ஒட்டுமொத்தமாக 51 லட்சம் மரக்கன்றுகளை நட அதிகாரிகள் இலக்கு வைத்துள்ளனர்
  • அதே சமயம் மாநிலத் தலைநகர் போபாலில் 40 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இந்நிகழ்வு கின்னஸ் உலக சாதனையாக அங்கீகாரம் பெற்றது.

மாணவர்களுக்கான குறிப்பு:

1. UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. அறிவியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…

-வர்ஷா செல்வச்சந்திரன்.

காங்கிரஸ் கோரிக்கையை ஏற்குமா மத்திய அரசு?

புத்தரை வழங்கிய இந்தியா, யுத்தத்தை ஏற்காது…

சம்விதான் காய திவாஸ் Vs மோடி முக்தி திவாஸ்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share