இந்திய பங்குச் சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும் கச்சா எண்ணெய் விலைகள்!

Published On:

| By Santhosh Raj Saravanan

Crude oil prices and foreign investors mood will determine the stock market movement

மேற்கு ஆசியாவில் நிலவும் தொடர்ச்சியான பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் இந்த வாரம் உள்நாட்டுப் பங்குச் சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ரூபாய்-டாலர் மதிப்பு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் செயல்பாடுகளும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆன்லைன் வர்த்தக நிறுவனமான என்ரிச் மணியின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர். பொன்முடி கூறுகையில், இந்த வாரம் சந்தை புவிசார் அரசியல் நிகழ்வுகளுக்கு மிகவும் உணர்திறன் மிக்கதாக இருக்கும் என்கிறார். மேலும், முதலீட்டாளர்கள் அமெரிக்கா-ஈரான் தொடர்பான நிகழ்வுகளில் கவனம் செலுத்துவார்கள் என்றும் கூறுகிறார்.

சந்தையின் போக்கைத் தீர்மானிப்பதில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலைகள் ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.  கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 90 டாலருக்கும் குறைவாக இருந்தால் அல்லது பதற்றத்தைத் தணிக்கும் முன்னேற்றம் ஏற்பட்டால், அதிக இடர் கொண்ட முதலீட்டுக் கருவிகளில் ஒரு நிவாரண ஏற்றம் காணப்படலாம். இருப்பினும், பதற்றம் அதிகரித்தால் சந்தை அழுத்தத்தில் இருக்கலாம். இந்த வாரம் பணவீக்கத் தரவுகளும் வெளியாக உள்ளன. இது சந்தைக்கு முக்கியமானதாக இருக்கும்.

ADVERTISEMENT

இதற்கிடையில், கனரா வங்கி, டாடா பவர், பார்தி ஏர்டெல், டிஎல்எஃப், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) மற்றும் ஜேஎஸ் டபிள்யூ ஸ்டீல் போன்ற நிறுவனங்கள் இந்த வாரத்தில் தங்களின் காலாண்டு முடிவுகளை அறிவிக்கும். இந்தியப் பங்குச் சந்தை குறுகிய காலத்தில் புவிசார் அரசியல் நிகழ்வுகளுக்கு அதிக உணர்திறன் கொண்டதாக இருக்கும். சந்தை ஒரு பரந்த வரம்பில் வர்த்தகமாகலாம். ஏப்ரல் மாதத்திற்கான இந்தியாவின் நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) பணவீக்கத் தரவுகள், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வட்டி விகிதக் கொள்கை குறித்த ஒரு குறிப்பை வழங்கும்.

அதே நேரத்தில் அமெரிக்காவின் சிபிஐ மற்றும் பிபிஐ தரவுகள், ஃபெடரல் ரிசர்வின் சாத்தியமான வட்டி விகிதக் குறைப்பு, பத்திர வருவாய்கள் மற்றும் உலகளாவிய இடர் உணர்வு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்ததும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த வாரம், பிஎஸ்இ சென்செக்ஸ் 414.69 புள்ளிகள் (0.53 சதவீதம்) உயர்ந்தது. அதே நேரத்தில் என்எஸ்இ நிஃப்டி 178.6 புள்ளிகள் (0.74 சதவீதம்) உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களும் இந்திய சந்தைகளில் இருந்து தொடர்ந்து பணத்தை எடுத்து வருகின்றனர். இந்த மாதம் இதுவரை, வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து ரூ. 14,231 கோடியை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share