சாலையில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போக்குவரத்து காவல் ஆய்வாளர் கைது

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் கணவருடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மணிமாறன் என்பவர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

ADVERTISEMENT

கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் வேளச்சேரியில் உள்ள தனது வீட்டிற்கு வந்த மணிமாறன், உறவினர் ஒருவருடன் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் ஒரே வாகனத்தில் வெளியே சென்றுள்ளனர்.

அப்போது வேளச்சேரி சாலையில் தனது கணவருடன் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம், காவல் ஆய்வாளர் மணிமாறன் பாலியல் ரீதியில் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், உடனடியாக வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வேளச்சேரி காவல்துறையினர், சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பெண்ணிடம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் மணிமாறனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share