தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
துறைமுகம் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

துறைமுகம் தொகுதி.. இங்கே அமைச்சர் சேகர்பாபு போட்டியிடுகிறார்.. அதிமுகவில ராயபுரம் மனோ வேட்பாளராக களம் காண்கிறார். துறைமுகம் தொகுதி 1989, 1991-ல் கலைஞர் வென்ற தொகுதி. 1996-ல் இருந்து 2006 வரைக்கும் பேராசிரியர் அன்பழகன் வென்ற தொகுதி.
2016, 2021-ல் சேகர்பாபு வெற்றி பெற்ற தொகுதி. 2021ல் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வத்தை 27,274 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்த முறையும் அமைச்சர் சேகர்பாபு களம் காண்கிறார். அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, தவெக சார்பில் சினோரா பி.எஸ். அசோக், நாதக சார்பில் ரூஃப்கான் ஷெரிஃப் ஆகியோர் களம் காண்கின்றனர்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக கூட்டணி – 43%
அதிமுக கூட்டணி-26%
தவெக- 25%
நாதக- 5% வாக்குகள் பெறும்
இந்த தொகுதியின் கள நிலவரம் அமைச்சர் சேகர்பாபுவுக்கு ரொம்பவே சாதகமாக இருக்கிறது
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
