நாடு முழுவதும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு (Session 1) முடிவுகள் இன்று இணையத்தில் (ஏப்ரல் 15)வெளியானது.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த பிப்ரவரி17ம் தேதி தொடங்கி மார்ச் 11 ம் தேதி வரை நடைபெற்றது. சிபிஎஸ்இ நிர்வாகம், இன்று பிற்பகல் 4.30 மணியளவில் 10ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
cbse.gov.in, results.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அதிகாரபூர்வ இணையதளங்களில் அதிகமானோர் பார்ப்பதில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க டிஜிலாக்கர் மூலம் முடிவுகளை பார்வையிடலாம்.
நாடு முழுவதும் தேர்வெழுதிய 93.7 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 1.47 லட்சம் மாணவர்கள் இரண்டாம் கட்ட தேர்வை எழுத வேண்டிய நிலையில் உள்ளனர்.
