உளவுத் துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமனம்!

Published On:

| By Kavi

வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உளவுத் துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

அந்தவகையில் நேற்று நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு புதிய நிதித்துறைச் செயலாளராக சித்திக் நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் இன்று வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், உளவுத் துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

ஏப்ரல் 2026-ல், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை சமயத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், உளவுத்துறை ஐ.ஜியாக இருந்த செந்தில் வேலன் மாற்றப்பட்டு அவினாஷ் குமார் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், அவனாஷ் குமார் மாற்றப்பட்டு உளவுத் துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டார். 

கடந்த 2025 செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த கரூர் பெருந்துயர வழக்கை விசாரிக்க அப்போதைய திமுக அரசு அஸ்ரா கார்க் தலைமையில் தான் விசாரணை குழுவை அமைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share