இந்த இரண்டு நாட்களில் வங்கி வாடிக்கையாளர்கள் UPI சேவையைப் பயன்படுத்த முடியாது என்று HDFC வங்கி அறிவித்துள்ளது.
HDFC வங்கி வாடிக்கையாளர்களுகு மிக முக்கியமான அறிவிப்பு வந்துள்ளது. இந்த டிசம்பர் மாதத்தில் இரண்டு நாட்கள் உங்களால் UPI மூலம் பணம் அனுப்ப முடியாது. HDFCவங்கி தனது தொழில்நுட்ப சேவையை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. டிசம்பர் 13 மற்றும் டிசம்பர் 21 ஆகிய தேதிகளில் அதிகாலை 2:30 மணி முதல் காலை 6:30 மணி வரை நான்கு மணி நேரம் UPI சேவைகள் முற்றிலும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அவசர பணப் பரிவர்த்தனைகள் எதுவும் செய்ய முடியாது. எனவே, உங்கள் முக்கிய பணப் பரிவர்த்தனைகளை இந்த நேரங்களைத் தவிர்த்து திட்டமிட்டால் நல்லது.
எந்தெந்த சேவைகள் பாதிக்கப்படும்?
இந்த பராமரிப்புப் பணிகளின் போது பின்வரும் சேவைகள் கிடைக்காது:
HDFC வங்கி சேமிப்புக் கணக்குகள் மற்றும் நடப்புக் கணக்குகளிலிருந்து UPI மூலம் பணம் அனுப்புதல்.
HDFC வங்கியால் வழங்கப்படும் RuPay கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி UPI மூலம் செய்யப்படும் பணம் அனுப்புதல்.
HDFC மொபைல் பேங்கிங் செயலி மூலம் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகள்.
HDFC வங்கி தனது சேவைகளை வழங்கும் Google Pay, PhonePe, Paytm போன்ற மூன்றாம் தரப்பு UPI செயலிகள்.
HDFC வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ள வணிகர்களுக்கான UPI வசதி.
மாற்று வழி என்ன?
வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க HDFC வங்கி PayZapp வாலட்டைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளது. PayZapp சேவைகள் பராமரிப்புப் பணிகளின் போது வழக்கம்போலவே செயல்படும். எனவே, பணம் அனுப்புதல் மற்றும் பரிமாற்றங்களைத் தடையில்லாமல் செய்யலாம். இந்த நேரத்தில் PayZapp வாலட் மூலம் நீங்கள் வழக்கம்போல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த அப்டேட்?
இந்த தொழில்நுட்ப மேம்பாடு வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த மற்றும் வேகமான வங்கி அனுபவத்தை வழங்குவதற்காகச் செயல்படுத்தப்படுகிறது. கணினி அமைப்புகளில் செய்யப்படும் மேம்பாடுகளுக்குப் பிறகு பரிவர்த்தனை செயலாக்கம் இன்னும் சீராகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், வங்கி தனது சேவைகளை மேலும் மேம்படுத்தி, வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
