தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-1 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – I (தொகுதி I பணிகள்) -க்கான அறிவிக்கை, தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (23.06.2026) வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் ஜூன் 30-ஆம் தேதி முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலி பணியிடங்களின் எண்ணிக்கை 26
துணை ஆட்சியர்-12
உதவி ஆணையர்-2
தொழிலாளர் நல உதவி ஆணையர் – 1
மாவட்டப் பதிவாளர் – 8
கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் – 3
உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை யுபிஐ மூலமாக செலுத்த வேண்டும். முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும். மாத சம்பளமாக ரூ. 56,100 முதல் ரூ. 2,05,700 வரை வழங்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கூடுதல் விவரங்கள், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் கல்வித் தகுதி உள்ளிட்ட முழுமையான தகவல்களைத் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in இல் தேர்வர்கள் விரிவாக அறிந்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

